ETV Bharat / state

எண்பதைத் தொட்ட ராமதாஸுக்கு புகழாரம்...! - பாமக

காஞ்சிபுரம்: 80ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ராமதாஸுக்கு அக்கட்சியின் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்தும் புகழாரமும் சூட்டிவருகின்றனர்.

ராமதாஸின் 80வது பிறந்தநாள் விழா
author img

By

Published : Jul 28, 2019, 9:32 AM IST

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 80ஆவது பிறந்தநாளை முத்து விழாவாக காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் நேற்று அக்கட்சி பொறுப்பாளர்கள் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வந்தவாசி துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய திருக்கச்சூர் ஆறுமுகம், "பாமக தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி இணைந்திருந்து கூட்டணி மட்டும்தான் தமிழ்நாட்டில் இதுவரையிலும் வெற்றிபெற்றிருக்கிறது. கூடிய விரைவில் அன்புமணி முதலமைச்சராக பதவியேற்பார்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகப்படியான இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த ஒரே தலைவர் ராமதாஸ்" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மருத்துவர் ராமதாஸின் 80ஆவது பிறந்தநாள் விழா

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 80ஆவது பிறந்தநாளை முத்து விழாவாக காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் நேற்று அக்கட்சி பொறுப்பாளர்கள் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வந்தவாசி துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய திருக்கச்சூர் ஆறுமுகம், "பாமக தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி இணைந்திருந்து கூட்டணி மட்டும்தான் தமிழ்நாட்டில் இதுவரையிலும் வெற்றிபெற்றிருக்கிறது. கூடிய விரைவில் அன்புமணி முதலமைச்சராக பதவியேற்பார்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகப்படியான இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த ஒரே தலைவர் ராமதாஸ்" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மருத்துவர் ராமதாஸின் 80ஆவது பிறந்தநாள் விழா
Intro:காஞ்சிபுரத்தை அடுத்த செங்கல்பட்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 80வது பிறந்த நாளை முத்து விழாவாக அக்கட்சி பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வந்தவாசி துரை அவர்களும் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்


Body:பாட்டாளி மக்கள் கட்சி எனது 40 வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டு 40 வருடமாக வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு கட்சியாகும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்திருந்து கூட்டணி மட்டும்தான் தமிழகத்தில் இது வரையிலும் பெற்றிருக்கிறது எனவே பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் மனிதன் வெல்லும் கூடிய விரைவில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் முதல்வராக பதவியேற்பார் அதிகப்படியான இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தது ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி ஒரே தலைவர் ராமதாஸ் என்று ராமதாஸ் அவர்களுக்கு திருக்கச்சூர் ஆறுமுகம் புகழாரம் சூட்டினார் இதனையடுத்து இவ்விழா முத்து விழாவாக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து நடத்தப்பட்டது


Conclusion:டாக்டர் ராமதாஸ் அவர்களின் 80வது பிறந்த நாளில் அக்கட்சியின் தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.