ETV Bharat / state

'ஓபிஎஸ்-இபிஎஸ் துரோகிகள்!' - ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனர்!

author img

By

Published : Apr 12, 2019, 1:22 PM IST

காஞ்சிபுரம்: முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், சபாநாயகர் தனபால் ஆகியோரை துரோகிகள் என விமர்சித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனரால் சலசலப்பு ஏற்பட்டது.

banner agaisnt cm and deputy cm creates

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சுற்றுச் சுவரில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோரின் உருவப்படங்கள் கொண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் அவர்களை துரோகிகள் என விமர்சித்து பல்வேறு காரணங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதிக மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடம் என்பதால் பொதுமக்கள் கவனிக்கும் வகையில் இந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து வந்த அதிமுக நிர்வாகிகள் உடனடியாக பேனரை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சுற்றுச் சுவரில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோரின் உருவப்படங்கள் கொண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் அவர்களை துரோகிகள் என விமர்சித்து பல்வேறு காரணங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதிக மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடம் என்பதால் பொதுமக்கள் கவனிக்கும் வகையில் இந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து வந்த அதிமுக நிர்வாகிகள் உடனடியாக பேனரை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக காம்பவுண்டு சுவரில் முதல்வர் துணை முதல்வர் மற்றும் சபாநாயகரை துரோகிகள் என விமர்சித்து வைத்த பேனரால் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டது அதிமுக நிர்வாகிகள் உடனடியாக பேனரை அப்புறப்படுத்தினர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 வது மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த சில நாட்களாக சூடிக்கொடுத்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக காம்பவுண்டு சுவரில் தமிழக முதல்வர் துணை முதல்வர் மற்றும் சபாநாயகரின் உருவப்படங்களை பேனர்கள் பதித்து மார்க்கர் எனும் பேனா மூலம் அவர்களை துரோகிகள் என விமர்சித்து பல்வேறு காரணங்களை எழுதி ஐந்துக்கு ஐந்து அளவிலான பேனர் வைத்த அதிகாலை பரபரப்பு ஏற்பட்டது அப்பகுதியில் அதிகாலையில் அதிக அளவில் நடைபயிற்சி மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கல்லூரி மற்றும் தொழிற் சாலையில் பேருந்து நிற்கும் இடம் என்பதாலும் அதிக அளவில் கூடும் பொது மக்கள் கவனிக்கும் வகையில் இந்த பேனர் அமைக்கப்பட்டுள்ளது இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளுக்கு தகவல் அறிந்து உடனடியாக 51அதிமுக வடட்ட நிர்வாகி ராகவேந்திரா குமரேசன் மற்றும் பாஜக நிர்வாகி உடனடியாக முதல்வர் மற்றும் துணை அவர்களை விமர்சித்து வைத்திருந்த பேனர்களை அப்புறப்படுத்தினர்... இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக முதல்வரை விமர்சித்து பேனர் வைக்கப்பட்டதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என தேர்தல் நேரத்தில் பரபரப்பாக 24 மணி நேரமும் அலுவலர்கள் அந்த பகுதியில் வந்து போகும் நிலையில் இதுபோன்று பேனர்கள் வைத்ததால் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்...


Visual in ftp 

TN_KPM_2_12_CM BANNER ISSUE_CHANDRU_7204951.mp4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.