ETV Bharat / state

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் மழை: 11.88 செ.மீ. மழைப்பதிவு

author img

By

Published : Dec 3, 2020, 10:07 AM IST

காஞ்சிபுரம்: புரெவி புயலால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் நேற்று நள்ளிரவு முதல் பெய்துவரும் மழையினால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தமாக 11.88 செ.மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

மழை
மழை

புரெவி புயல் காரணமாக தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நிவர் புயலால் கனமழை பெய்து கடந்த சில தினங்களாக மழை நின்றிருந்த நிலையில், சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாமல், பாலுசெட்டி சத்திரம், ஓரிக்கை, செவிலிமேடு, மாகறல், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று (டிச. 02) நள்ளிரவு முதலே தொடர்ந்து மழை பெய்துவந்த நிலையில் இன்று (டிச. 03) காலையிலும் தொடர்ந்து மழை நீடித்துவருகிறது.

இதன் காரணமாக காலையில் பணிக்குச் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவிவருகின்றது.

ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செஙல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் இதுவரை 540-க்கும் மேற்பட்டவை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் மீதமுள்ள ஏரிகளும் விரைவில் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 1.74 செ.மீ., ஸ்ரீபெரும்புதூரில், 1.42 செ.மீ., உத்திரமேரூரில் 3 செ.மீ., வாலாஜாபாத்தில் 1.1 செ.மீ., குன்றத்தூரில் 2.02 செ.மீ. என மொத்தமாக 11.88 செ.மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு!

புரெவி புயல் காரணமாக தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நிவர் புயலால் கனமழை பெய்து கடந்த சில தினங்களாக மழை நின்றிருந்த நிலையில், சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாமல், பாலுசெட்டி சத்திரம், ஓரிக்கை, செவிலிமேடு, மாகறல், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று (டிச. 02) நள்ளிரவு முதலே தொடர்ந்து மழை பெய்துவந்த நிலையில் இன்று (டிச. 03) காலையிலும் தொடர்ந்து மழை நீடித்துவருகிறது.

இதன் காரணமாக காலையில் பணிக்குச் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவிவருகின்றது.

ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செஙல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் இதுவரை 540-க்கும் மேற்பட்டவை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் மீதமுள்ள ஏரிகளும் விரைவில் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 1.74 செ.மீ., ஸ்ரீபெரும்புதூரில், 1.42 செ.மீ., உத்திரமேரூரில் 3 செ.மீ., வாலாஜாபாத்தில் 1.1 செ.மீ., குன்றத்தூரில் 2.02 செ.மீ. என மொத்தமாக 11.88 செ.மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.