ETV Bharat / state

ஆட்சியர் தலைமையில் தேர்தல் நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

author img

By

Published : Mar 3, 2021, 10:47 PM IST

கள்ளக்குறிச்சி: மாவட்ட ஆட்சியர் தலைமையில் அச்சகம், திருமண மண்டபம், நகைக்கடை உரிமையாளர்கள் ஆகியோருக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

election code of conduct in Kallakurichi, Kallakurichi collector explained the rules of election for Printing press owners, Kallakurichi collector  Kallakurichi latest, கள்ளக்குறிச்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டச்செய்திகள்
consultative-meeting-on-election-ethics-chaired-by-kallakurichi-district-collector

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காரணமாக அச்சக உரிமையாளர்கள், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் ஆகியோருக்கு தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிரண்குராலா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு, வெளியூரிலிருந்து கூட்டமாக வந்து தங்குவதற்கு அனுமதி வழங்கக்கூடாது, குழுவாக தங்க அனுமதிக்கப்படுவார்கள். ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதங்களையோ, பட்டாசு பொருள்களையோ வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது. தேர்தல் பரப்புரை முடிவடையும் நாளான ஏப்ரல் 4 அன்று வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் தொடர்பாக வந்து தங்கி இருப்பவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றிட வேண்டும்.

திருமணம் மற்றும் சுபநிகழ்வுகள் நடைபெறும் போது அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்கள் மற்றும் உருவங்கள் பொறித்த தட்டிகள், பதாகைகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் ஆகியவற்றை வைத்து வாக்கு சேகரிக்கக் கூடாது போன்ற பல்வேறு தேர்தல் நடத்தை விதிகளை மாவட்ட ஆட்சியர் விளக்கினார்.

மேலும் அச்சக உரிமையாளர்கள், பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் போன்றோருக்கும் தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அச்சக உரிமையாளர்கள், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மாடூர் சுங்கச்சாவடியில் பறக்கும் படை அலுவலர்கள் 4 லட்சம் ரூபாய் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காரணமாக அச்சக உரிமையாளர்கள், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் ஆகியோருக்கு தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிரண்குராலா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு, வெளியூரிலிருந்து கூட்டமாக வந்து தங்குவதற்கு அனுமதி வழங்கக்கூடாது, குழுவாக தங்க அனுமதிக்கப்படுவார்கள். ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதங்களையோ, பட்டாசு பொருள்களையோ வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது. தேர்தல் பரப்புரை முடிவடையும் நாளான ஏப்ரல் 4 அன்று வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் தொடர்பாக வந்து தங்கி இருப்பவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றிட வேண்டும்.

திருமணம் மற்றும் சுபநிகழ்வுகள் நடைபெறும் போது அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்கள் மற்றும் உருவங்கள் பொறித்த தட்டிகள், பதாகைகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் ஆகியவற்றை வைத்து வாக்கு சேகரிக்கக் கூடாது போன்ற பல்வேறு தேர்தல் நடத்தை விதிகளை மாவட்ட ஆட்சியர் விளக்கினார்.

மேலும் அச்சக உரிமையாளர்கள், பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் போன்றோருக்கும் தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அச்சக உரிமையாளர்கள், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மாடூர் சுங்கச்சாவடியில் பறக்கும் படை அலுவலர்கள் 4 லட்சம் ரூபாய் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.