ETV Bharat / state

சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் 13 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

author img

By

Published : Oct 14, 2022, 8:28 AM IST

Etv Bharatசிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது
Etv Bharatசிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சுண்டக்காம் பாளையம் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்த இளைஞரை கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட தகவலில் சத்தியமங்கலம் அருகே உள்ள பூசாரிபாளையம் கிராமத்தை சேர்ந்த 22 வயதான இளைஞர் கடந்த 8ஆம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். அதோடு அருகில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று (அக்-13) அவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:பரங்கிமலை கொலை வழக்கு விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சுண்டக்காம் பாளையம் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்த இளைஞரை கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட தகவலில் சத்தியமங்கலம் அருகே உள்ள பூசாரிபாளையம் கிராமத்தை சேர்ந்த 22 வயதான இளைஞர் கடந்த 8ஆம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். அதோடு அருகில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார்.

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று (அக்-13) அவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:பரங்கிமலை கொலை வழக்கு விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.