ETV Bharat / state

விநாயகர் சிலையை கரைக்க அனுமதிக்க மாட்டோம்!

author img

By

Published : Aug 17, 2019, 7:00 AM IST

ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் விநாயகர் சிலையை கரைக்க அனுமதிக்க மாட்டோம் என பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு

சத்தியமங்கலம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது அவர், கடந்த இரண்டு வருடங்களாக விநாயகர் சிலைகள் எங்களின் எதிர்ப்பையும் மீறி கீழ்பவானி வாய்க்காலில் கரைக்கப்பட்டு வந்தது. இதனால் பாசன விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நீர் நிர்வாகம் பாதிப்படைகிறது.

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகர் சிலையை கரைக்க அனுமதிக்க மாட்டோம்

ஆகவே நடப்பு ஆண்டில் விநாயகர் சிலைகளை கீழ்பவானி வாய்க்காலில் கரைக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.மேலும், சிலைகளை கரைக்க அரசு அனுமதிக்கக் கூடாது, அப்படி அனுமதித்தால் எங்களின் எதிர்ப்பை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறினார்.

சத்தியமங்கலம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு நீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,

அப்போது அவர், கடந்த இரண்டு வருடங்களாக விநாயகர் சிலைகள் எங்களின் எதிர்ப்பையும் மீறி கீழ்பவானி வாய்க்காலில் கரைக்கப்பட்டு வந்தது. இதனால் பாசன விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நீர் நிர்வாகம் பாதிப்படைகிறது.

கீழ்பவானி வாய்க்காலில் விநாயகர் சிலையை கரைக்க அனுமதிக்க மாட்டோம்

ஆகவே நடப்பு ஆண்டில் விநாயகர் சிலைகளை கீழ்பவானி வாய்க்காலில் கரைக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.மேலும், சிலைகளை கரைக்க அரசு அனுமதிக்கக் கூடாது, அப்படி அனுமதித்தால் எங்களின் எதிர்ப்பை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறினார்.

Intro:Body:tn_erd_03_sathy_farmer_nallusamy_byte_tn10009

கீழ்பவானிவாய்க்காலில் விநாயகர் சிலையை கரைக்க அனுமதிக்க மாட்டோம்: கீழ்பவானி பாச விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி


சத்தியமங்கலம் பவானிசாகர் அணையில் கீழ் பவானி பாசனத்திற்கு நீர் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த கீழ்பவானி பாச விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.



விநாயகர் சதுர்த்தி விழாவின்போது வைக்கப்படும் சிலைகள் கீழ்பவானி வாய்க்காலில் கரைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சிலைகளை கீழ்பவானி வாய்க்காலில் கரைக்க விடமாட்டோம். காவிரியில் தினந்தோறும் நீர் பங்கீடு முறையில் நீரை பெற்றிருந்தால் அதிகப்படியான உபரிநீர் கடலில் கலப்பதை தவிர்த்திருக்கலாம். மாதாந்திர அடிப்படையில் என்ற முறையை கர்நாடக அரசு பின்பற்றாமல் கர்நாடகாவில் அணைகள் நிரம்பியபின் அணைகளின் பாதுகாப்பு கருதி திறக்கப்படும் உபரி நீர் மேட்டூர் அணையில் நிரம்பி பின்னர் வீணாக கடலுக்கு செல்கிறது. கடந்த 86 ஆண்டுகளில் மேட்டூர் அணையில் மட்டும் 40 முறை அணை நிரம்பி உபரி நீர் கடலில் கலந்து வீணாகியுள்ளது. இதுபோன்ற காலங்களில் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள துணை ஆறுகள், குளம் குட்டைகளுக்கு உபரி நீரை திருப்பியிருக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.