ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் கரடிகள் நடமாட்டம் - வனத்துறை எச்சரிக்கை - Sathyamangalam

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள தலமலை வனச்சாலையில் கரடிகள் உலா வருவதால், மலை கிராம மக்கள் இரவு நேரங்களில் பயணிப்பதை தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

வனச்சாலையை கடந்து செல்லும் கரடி
author img

By

Published : Jul 17, 2019, 10:12 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. இவைகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கம். இந்நிலையில், திம்பம் மலை உச்சியில் இருந்து தலமலை வரை 23 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியின் வழியே செல்லும் சாலையில், தற்போது கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன.

சாலையை கடந்து செல்லும் கரடி

இந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பெஜலட்டி மலைகிராமத்தை ஒட்டியுள்ள வனச்சாலையில் பகல் நேரங்களிலும் கரடிகளின் நடமாட்டம் இருப்பதால், மலை கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும், சாலையில் செல்வோரை கரடிகள் தாக்க வாய்ப்புள்ளதால், பகல் நேரங்களில் பயணிப்போர் மிகவும் கவனத்துடன் பயணிக்குமாறும், இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்வதை தவிர்க்குமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. இவைகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கம். இந்நிலையில், திம்பம் மலை உச்சியில் இருந்து தலமலை வரை 23 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியின் வழியே செல்லும் சாலையில், தற்போது கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன.

சாலையை கடந்து செல்லும் கரடி

இந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பெஜலட்டி மலைகிராமத்தை ஒட்டியுள்ள வனச்சாலையில் பகல் நேரங்களிலும் கரடிகளின் நடமாட்டம் இருப்பதால், மலை கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும், சாலையில் செல்வோரை கரடிகள் தாக்க வாய்ப்புள்ளதால், பகல் நேரங்களில் பயணிப்போர் மிகவும் கவனத்துடன் பயணிக்குமாறும், இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்வதை தவிர்க்குமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.


Intro:தலமலை வனச்சாலையில் நடமாடும் கரடி. மலைகிராம மக்கள் அச்சம். வனச்சாலையில் இரவு நேரத்தில் பயணிப்பதை தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தல்.
Body:tn_erd_06_sathy_karadi_vis_tn10009

தலமலை வனச்சாலையில் நடமாடும் கரடி. மலைகிராம மக்கள் அச்சம். வனச்சாலையில் இரவு நேரத்தில் பயணிப்பதை தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தல்.



சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தலமலை வனச்சாலையில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மலைகிராம மக்கள் இரவு நேரங்களில் வனச்சாலையில் பயணிப்பதை தவிர்க்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்டு பல்வேறு வகை விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக திம்பம் மலை உச்சியிலிருந்து தலமலை வரை 23 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் வனச்சாலையில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பெஜலட்டி மலைகிராமத்தை ஒட்டியுள்ள வனச்சாலையில் பகல்நேரங்களில் கரடி நடமாட்டம் உள்ளது. இதனால் மலை கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கரடிகள் சாலையில் செல்வோரை தாக்க வாய்ப்புள்ளதால் பகல்நேரங்களில் வனச்சாலையில் பயணிப்போர் மிகவும் கவனத்துடன் பயணிக்குமாறும் இரவு நேரத்தில் வனச்சாலையில் செல்வதை தவிர்க்குமாறு மலைகிராம மக்களிடம் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.