ETV Bharat / state

ஈரோட்டில் பெண் உள்பட மூவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை

author img

By

Published : Jul 6, 2021, 6:21 PM IST

கொடுமுடி அருகே குடும்பத் தகராறு காரணமாக, தாய், மகன், மகள் ஆகியோர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல!
தற்கொலை தீர்வல்ல!

ஈரோடு: கொடுமுடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது இரு குழந்தைகளுடன் விஷ மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்த பெண்ணின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடுமுடி அருகே வீரப்பண்ணகாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு சங்கர். விவசாயம் செய்துவருகிறார். இவரது மனைவி சசிகலா. இத்தம்பதியினருக்கு நிகின் சங்கர், சுதர்சனா என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு (ஜூலை 6) கணவன், மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த சசிகலா, நிகின் சங்கர், சுதர்சனா
உயிரிழந்த சசிகலா, நிகின் சங்கர், சுதர்சனா

பின்னர் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் சசிகலா, அவரது மகன், மகள் ஆகியோர் விஷ மாத்திரை சாப்பிட்டு மயங்கிக் கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரபு சங்கர், மூவரையும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூவரும், இன்று (ஜூலை 6) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் மூவரின் உடலும் பிரபு சங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்கொலை தீர்வல்ல!
தற்கொலை தீர்வல்ல!

இதுகுறித்து மலையம்பாளையம் காவலர்கள் விசாரித்து வருகின்றனர். குடும்பத் தகராறில் தாய், மகன், மகள் ஆகிய மூவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, பணம் கொள்ளை!

ஈரோடு: கொடுமுடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது இரு குழந்தைகளுடன் விஷ மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்த பெண்ணின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடுமுடி அருகே வீரப்பண்ணகாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு சங்கர். விவசாயம் செய்துவருகிறார். இவரது மனைவி சசிகலா. இத்தம்பதியினருக்கு நிகின் சங்கர், சுதர்சனா என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு (ஜூலை 6) கணவன், மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த சசிகலா, நிகின் சங்கர், சுதர்சனா
உயிரிழந்த சசிகலா, நிகின் சங்கர், சுதர்சனா

பின்னர் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் சசிகலா, அவரது மகன், மகள் ஆகியோர் விஷ மாத்திரை சாப்பிட்டு மயங்கிக் கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரபு சங்கர், மூவரையும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூவரும், இன்று (ஜூலை 6) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் மூவரின் உடலும் பிரபு சங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்கொலை தீர்வல்ல!
தற்கொலை தீர்வல்ல!

இதுகுறித்து மலையம்பாளையம் காவலர்கள் விசாரித்து வருகின்றனர். குடும்பத் தகராறில் தாய், மகன், மகள் ஆகிய மூவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, பணம் கொள்ளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.