ETV Bharat / state

கிணற்றில் விழுந்த காட்டெருமை உயிரிழப்பு!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியிலிருந்து வழித்தவறி வந்த ஆண் காட்டெருமை ஒன்று 120 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது.

author img

By

Published : Sep 7, 2019, 2:45 PM IST

Updated : Sep 7, 2019, 4:47 PM IST

bison

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராமபைலூர் கிராமத்தின் வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 120 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்தக் கிணறு விவசாய பயன்பாடு இன்றி பாழடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றவர்கள் அங்குள்ள பாழங்கிணற்றிலிருந்து சத்தம் வந்ததைக்கண்டு எட்டிப்பார்த்தனர். கிணற்றிற்குள் காட்டெருமை ஒன்று தத்தளிப்பதை கண்ட அவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னாட் தலைமையிலான ஊழியர்கள் கிணற்றில் சிக்கித்தவித்த காட்டெருமையை மீட்பதற்காக கிரேன் உதவியுடன் முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே அந்த காட்டெருமை உயிரிழந்தது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப்பின் உயிரிழந்த காட்டெருமையின் உடலை வனத் துறையினர் மீட்டனர்.

கிணற்றில் விழுந்த காட்டெருமையின் உடல் மீட்பு

இதையடுத்து காட்டெருமையின் உடலை அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டுசென்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத் துறை கால்நடை மருத்துவர் அசோகன் உடற்கூறாய்வு செய்தார். இறந்தது சுமார் 15 வயது மதிக்கத்தக்க காட்டெருமை என்பது தெரியவந்தது. இதையடுத்து காட்டெருமையின் உடல் பறவைகள், விலங்குகளுக்கு உணவாக அப்படியே வனப்பகுதியில் விடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராமபைலூர் கிராமத்தின் வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 120 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்தக் கிணறு விவசாய பயன்பாடு இன்றி பாழடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றவர்கள் அங்குள்ள பாழங்கிணற்றிலிருந்து சத்தம் வந்ததைக்கண்டு எட்டிப்பார்த்தனர். கிணற்றிற்குள் காட்டெருமை ஒன்று தத்தளிப்பதை கண்ட அவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னாட் தலைமையிலான ஊழியர்கள் கிணற்றில் சிக்கித்தவித்த காட்டெருமையை மீட்பதற்காக கிரேன் உதவியுடன் முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே அந்த காட்டெருமை உயிரிழந்தது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப்பின் உயிரிழந்த காட்டெருமையின் உடலை வனத் துறையினர் மீட்டனர்.

கிணற்றில் விழுந்த காட்டெருமையின் உடல் மீட்பு

இதையடுத்து காட்டெருமையின் உடலை அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டுசென்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத் துறை கால்நடை மருத்துவர் அசோகன் உடற்கூறாய்வு செய்தார். இறந்தது சுமார் 15 வயது மதிக்கத்தக்க காட்டெருமை என்பது தெரியவந்தது. இதையடுத்து காட்டெருமையின் உடல் பறவைகள், விலங்குகளுக்கு உணவாக அப்படியே வனப்பகுதியில் விடப்பட்டது.

Intro:Body:tn_erd_01_sathy_bison_death_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த காட்டெருமை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே ராமபைலூர் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த காட்டெருமை 120 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ராமபைலூர் கிராமத்தின் வடக்குப்பகுதியில் வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள பெரிய கவுண்டர் தோட்டத்தில் 120 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்த கிணறு விவசாய உபயோகத்திற்கு பயன்பாடு இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. இந்நிலையில் அப்பகுதிக்கு மாடு மேய்க்க சென்றவர்கள் பாழடைந்த கிணற்றில் சத்தம் வருவதைக்கண்டு எட்டிப்பார்த்தபோது கிணற்றில் உள்ள நீரில் காட்டெருமை ஒன்று தத்தளிப்பதை கண்டனர். இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னாட் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் கிணற்றில் தவித்த காட்டெருமையை மீட்பதற்காக கிரேன் உதவியுடன் முயற்சி மேற்கொண்டனர். அப்போது காட்டெருமை உயிரிழந்தது. 3 மணி நேர போராட்டத்திற்குப்பின் உயிரிழந்த காட்டெருமை மீட்கப்பட்டது. இதையடுத்து காட்டெருமையின் உடல் அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் உடற்கூறாய்வு செய்த போது இறந்தது சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டெருமை என்பது தெரிய வந்தது. இதையடுத்து காட்டெருமையின் உடல் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக அப்படியே வனப்பகுதியில் விடப்பட்டது.
Conclusion:
Last Updated : Sep 7, 2019, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.