ETV Bharat / state

'கோயிலைப்போல குழந்தைகளை நூலகத்திற்கும் அழைத்துச் செல்லவேண்டும்' - இயக்குநர் வசந்த்

author img

By

Published : Oct 21, 2019, 12:31 PM IST

ஈரோடு: பெற்றோர், குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச் செல்வதைப் போல நூலகத்துக்கும் அழைத்துச் செல்லவேண்டுமென இயக்குநர் வசந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

erode

ஈரோடு, சத்தியமங்கலத்தை அடுத்த புளியம்பட்டியில் 'விடியல் அறக்கட்டளை' சார்பில் புத்தகக் காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் வசந்த், கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெற்றோர் தங்களது குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச் செல்வதைப் போலவே நூலகத்துக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்.

இயக்குநர் வசந்த்

மேலும் பேசிய அவர், "எனது தாய் சிவகாமி, தினமும் என்னை புத்தகங்கள் வாங்கிவர நூலகத்திற்கு அனுப்புவார்கள். அதன் தாக்கம்தான் என்னை இயக்குநராக்கியது" என்றார்.

'டிஜிட்டல் ஃபாஸ்டிங்' முறையில் இணையதளத்திலிருந்து மக்கள் குறைந்தது நான்கு மணி நேரமாவது விலகியிருக்க வேண்டும். அந்த நேரத்தை புத்தகம் படிக்கச் செலவழிக்கலாம் என்று வசந்த் தெரிவித்தார். மேலும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை இந்தச் சிறிய ஊரில் ஏற்படுத்திய விடியல் அறக்கட்டளைக்கு தனது பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார். இந்தக் கண்காட்சியில் 20க்கும் மேற்பட்ட புத்தகப் பதிப்பகங்களின் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.

புத்தகக் கண்காட்சி

கல்வி, சமூகம், அறிவியல், வரலாறு, அரசியல் உள்ளிட அனைத்து வகையான புத்தகங்களும் காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் விண்வெளிக் கண்காட்சி

ஈரோடு, சத்தியமங்கலத்தை அடுத்த புளியம்பட்டியில் 'விடியல் அறக்கட்டளை' சார்பில் புத்தகக் காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் வசந்த், கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெற்றோர் தங்களது குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச் செல்வதைப் போலவே நூலகத்துக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்.

இயக்குநர் வசந்த்

மேலும் பேசிய அவர், "எனது தாய் சிவகாமி, தினமும் என்னை புத்தகங்கள் வாங்கிவர நூலகத்திற்கு அனுப்புவார்கள். அதன் தாக்கம்தான் என்னை இயக்குநராக்கியது" என்றார்.

'டிஜிட்டல் ஃபாஸ்டிங்' முறையில் இணையதளத்திலிருந்து மக்கள் குறைந்தது நான்கு மணி நேரமாவது விலகியிருக்க வேண்டும். அந்த நேரத்தை புத்தகம் படிக்கச் செலவழிக்கலாம் என்று வசந்த் தெரிவித்தார். மேலும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை இந்தச் சிறிய ஊரில் ஏற்படுத்திய விடியல் அறக்கட்டளைக்கு தனது பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார். இந்தக் கண்காட்சியில் 20க்கும் மேற்பட்ட புத்தகப் பதிப்பகங்களின் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.

புத்தகக் கண்காட்சி

கல்வி, சமூகம், அறிவியல், வரலாறு, அரசியல் உள்ளிட அனைத்து வகையான புத்தகங்களும் காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் விண்வெளிக் கண்காட்சி

Intro:Body:tn_erd_02_book_exibition_sathy_vis_tn10009

கோவிலுக்கு செல்வதைபோல நூலகத்துக்கும் குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் செல்ல வேண்டும்:

இயக்குநர் வசந்த்


கோவிலுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதை போல நூலகத்துக்கும் குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் செல்ல வேண்டும் என இயக்குநர் வசந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டியில் விடியல் அறக்கட்டளை சார்பில் புத்தக்கண்காட்சி நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பகங்களின் ஆயிரக்கணக்கான புத்தங்கள் இடம்பெற்றிருந்தன. கல்வி, சமூகம், அறிவியல்,வரலாறு தலைவர்கள் அரசியல் குழந்தை பாடல் என அனைத்து தரப்பு மக்களை கவரும் வகையில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. தினந்தோறும் நடைபெறும் கண்காட்சியில் பள்ளி மாணவ,மாணவியர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். திரைப்பட இயக்குநர் வசந்த் கண்காட்சியை பார்வையிட்டு, புத்தகம் வாசிப்பு பழக்கத்தை இந்த சிறிய ஊரில் ஏற்படுத்திய விடியல் அறக்கட்டளைக்கு பாராட்டு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் பெற்றோர் தங்களது குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் செல்வதைபோல நூலகத்துக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். எனது தாய் சிவகாமி, தினந்தோறும் நூலகத்துக்கு சென்று புத்தகங்கள் வாங்கிவர அனுப்புவார்கள். அதன் தாக்கத்தினால் இயக்குநரானேன். டிஜிட்டல் பாஸ்டிங் என சொல்லக்கூடிய செல்போனில் இருந்து 4 மணிநேரமாவது தனித்து இருக்க வேண்டும். அந்த நேரத்தில் புத்தகங்களை வாசித்து பழகலாம். திரைப்படங்களை பொறுத்தவரை சர்சைக்குரிய பேச்சுகள் வர வேண்டும் அப்போது அது நல்ல திரைப்படமாக இருக்கும் என்றார்.

பேட்டி:
திரைப்பட இயக்குநர் வசந்த்





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.