கடந்த 2019ஆம் ஆணடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 ஏடிஎம் இயந்திரங்களில் 1 கோடியே 32 லட்சம் கொள்ளை போனது. இதுதொடர்பாக வங்கி அலுவலர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
குற்றப்பிரிவு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஏ.டிஎம்-களுக்கு பணம் நிரப்பும் நிறுவனத்தில் பணிபுரிந்த பூபாலன் தன் நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை கொள்ளை அடித்தது தெரிய வந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த 5 பேரையும் குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பூபாலன் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
தலைமறைவாக இருந்த ஸ்ரீனிவாசன், கேசவன்,மணிகண்டன், குமார் ஆகிய நான்கு பேரையும் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: சிபிஎம் கட்சிப் பிரமுகர் கொலை - 5 பேர் கைது