ETV Bharat / state

கடையின் மேற்கூரையைப் பிரித்து கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

author img

By

Published : Jul 10, 2019, 11:43 AM IST

ஈரோடு: துணிக்கடை, பெயிண்ட் கடைகளின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி ஆடைகளையும், பணத்தையும் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேற்கூரையை பிரித்து கொள்ளை-மர்மநபர்கள் துணிகரம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் மொடச்சூர் சாலையில் பிரியா என்ற பெண்ணுக்குச் சொந்தமான துணிக்கடை இயங்கி வந்தது. இவரது கடையின் அருகில் எஸ்.டி.என்.காலனி பகுதியைச்சேர்ந்த லிங்கப்பன் என்பவர் ஸ்டீல்ஸ் மற்றும் பெயிண்ட் கடை நடத்திவருகிறார்.

இந்நிலையில், இன்று காலை லிங்கப்பன் வழக்கம்போல் தனது கடையை திறந்தபோது, கடையின் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.7,500 பணம் காணமால் போயிருப்பதையும், மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டுள்ளதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர் பக்கத்துக்கடையைச் சேர்ந்த பிரியாவிற்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து கடைக்கு வந்த பிரியாவின் கணவர், அவரின் துணிக்கடையை திறந்து பார்த்தபோது அவர்களது கடையின் மேற்கூரையும் பிரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேற்கூரையைப் பிரித்து கொள்ளை - மர்ம நபர்கள் துணிகரம்

மேலும், கடையின் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகள் பாதியளவு குறைத்துள்ளதையும் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.17,500 பணம் கொள்ளையடிக்கப்பட்டுருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின்னர் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு இருவரும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றத்தடுப்பு காவல்துறையினர் கொள்ளையர்கள் வந்த தடங்கள் குறித்தும், மேற்கூரை பிரிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு தடவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளையும், தடயங்களையும் சேகரித்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் மொடச்சூர் சாலையில் பிரியா என்ற பெண்ணுக்குச் சொந்தமான துணிக்கடை இயங்கி வந்தது. இவரது கடையின் அருகில் எஸ்.டி.என்.காலனி பகுதியைச்சேர்ந்த லிங்கப்பன் என்பவர் ஸ்டீல்ஸ் மற்றும் பெயிண்ட் கடை நடத்திவருகிறார்.

இந்நிலையில், இன்று காலை லிங்கப்பன் வழக்கம்போல் தனது கடையை திறந்தபோது, கடையின் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.7,500 பணம் காணமால் போயிருப்பதையும், மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டுள்ளதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர் பக்கத்துக்கடையைச் சேர்ந்த பிரியாவிற்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து கடைக்கு வந்த பிரியாவின் கணவர், அவரின் துணிக்கடையை திறந்து பார்த்தபோது அவர்களது கடையின் மேற்கூரையும் பிரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேற்கூரையைப் பிரித்து கொள்ளை - மர்ம நபர்கள் துணிகரம்

மேலும், கடையின் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகள் பாதியளவு குறைத்துள்ளதையும் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.17,500 பணம் கொள்ளையடிக்கப்பட்டுருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின்னர் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு இருவரும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றத்தடுப்பு காவல்துறையினர் கொள்ளையர்கள் வந்த தடங்கள் குறித்தும், மேற்கூரை பிரிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு தடவியல் நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளையும், தடயங்களையும் சேகரித்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Intro:tn_erd_02_sathy_shop_theft_vis_tn10009Body:tn_erd_02_sathy_shop_theft_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் செயல்படும் ரெடிமேடு துணிக்கடை மற்றும் பெயிண்ட் கடைகளின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கிய அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு லட்சம் மதிப்பிலான ரொடிமேடு துணிகள் மற்றும் இரு கடைகளின் கல்லாவில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.


ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் செயல்பட்டுவரும் தனியார் ரெடிமேடு துணிக்கடையை பெரிய மொடச்சூர் பகுதியைச்சேர்ந்த பிரியா என்ற பெண்மணி நடத்திவருகிறார். இவரது கடையின் அருகில் எஸ்.டி.என்.காலனி பகுதியைச்சேர்ந்த லிங்கப்பன் என்பவர் ஸ்டீல்ஸ் மற்றும் பெயிண்ட் கடை வைத்து நடத்திவருகிறார். இவர் கடையை திறந்து வந்த போது கடையின் உள்ளிருந்த கல்லா பெட்டி உடைந்துள்ளதையும் மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டுள்ளதையும் கண்டு அதிச்சியடைந்துள்ளார். அதன் பின்னர் பக்கத்துக்கடையை சேர்ந்த பிரியாவிற்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகலறிந்து கடைக்கு வந்த பிரியாவின் கணவர் கடையை திறந்து பார்த்தபோது அவர்களது கடையின் மேற்கூரையும் பிரிக்கப்பட்டிருந்துள்ளது. கடையின் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகள் பாதியளவு குறைத்துள்ளதையும் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.17.500 ஆயிரத்தையும் காணாது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பெயிண்ட் கடையின் கல்லாவில் இருந்த ரூ.7.500ம் காணமால் போயுள்ளது. அதன்பின்னர் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றத்தடுப்பு காவல்துறையினர் திருடர்கள் வந்த தடங்கள் குறித்தும் மேற்கூரை பிரிக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டு தடவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஈரோட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட தடவியல் நிபுணர்கள் கைரேகைகளையும் தடயங்களையும் சேகரித்தனர்.

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.