ETV Bharat / state

ஈரோடு ஜல்லிக்கட்டில் 225 காளைகள் பங்கேற்க வாய்ப்பு - Erode Jallikattu Competition

ஈரோடு: இந்தாண்டு பவளத்தாம்பாளைம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 225 காளைகள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு ஜல்லிக்கட்டு போட்டி பவளத்தாம்பாளைம் ஜல்லிக்கட்டு போட்டி Erode Jallikattu Competition Pavalathampalayam Jallikattu Competition
Erode Jallikattu Competition
author img

By

Published : Jan 15, 2020, 8:31 AM IST

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் பேரவையின் சார்பில் இரண்டாவது ஆண்டாக ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வரும் 18ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள 10 ஏக்கருக்கும் மேற்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.

போட்டியில் கலந்துகொள்ளவுள்ள காளைகள் பரிசோதனை செய்யும் இடம், மாடுபிடி வீரர்கள் பதிவுசெய்யும் இடம், காளைகள் விடும் வாடிவாசல் பகுதி, பார்வையாளர்கள் அமர்விடம், காளைகள், மாடிபிடி வீரர்கள் காயமடைந்தால் அவர்களை அழைத்துச் செல்வதற்குரிய அவசர ஊர்தி வசதி, கால்நடை மருத்துவர்கள் காளைகளைப் பரிசோதனை செய்யும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

மேலும் போட்டி நடைபெறவுள்ள சமயங்களில் முதலுதவி வழங்குவதற்குரிய மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் தயாரான நிலையிலும், போட்டியின்போது காயம்படும் காளைகளை எடுத்துச் செல்வதற்குரிய அவசர ஊர்தி, மாடுபிடி வீரர்களைக் கொண்டுசெல்லும் அவசர ஊர்தி தயார் நிலையிலும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியத்துவம், அவசியம் குறித்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துபவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறுகையில், "கடந்தாண்டை விடவும் இந்தாண்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 225 காளைகள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. பார்வையாளர்கள் போட்டிகளைக் காண்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மது அருந்தி காளைகளைப் பிடித்திட மாடுபிடி வீரர்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது. காலை 8 மணியிலிருந்து 2 மணிவரை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில் பாதுகாப்புப் பணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஜல்லிக்கட்டுப் பணிகளை ஆய்வுசெய்யும் மாவட்ட ஆட்சியர்

போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ஆயுள் காப்பீட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விபத்துகள் இல்லாத, யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் போட்டிகளைச் சிறப்பான முறையில் நடத்திடுவதற்குரிய அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - காளைகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் பேரவையின் சார்பில் இரண்டாவது ஆண்டாக ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வரும் 18ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள 10 ஏக்கருக்கும் மேற்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.

போட்டியில் கலந்துகொள்ளவுள்ள காளைகள் பரிசோதனை செய்யும் இடம், மாடுபிடி வீரர்கள் பதிவுசெய்யும் இடம், காளைகள் விடும் வாடிவாசல் பகுதி, பார்வையாளர்கள் அமர்விடம், காளைகள், மாடிபிடி வீரர்கள் காயமடைந்தால் அவர்களை அழைத்துச் செல்வதற்குரிய அவசர ஊர்தி வசதி, கால்நடை மருத்துவர்கள் காளைகளைப் பரிசோதனை செய்யும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

மேலும் போட்டி நடைபெறவுள்ள சமயங்களில் முதலுதவி வழங்குவதற்குரிய மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் தயாரான நிலையிலும், போட்டியின்போது காயம்படும் காளைகளை எடுத்துச் செல்வதற்குரிய அவசர ஊர்தி, மாடுபிடி வீரர்களைக் கொண்டுசெல்லும் அவசர ஊர்தி தயார் நிலையிலும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியத்துவம், அவசியம் குறித்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துபவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறுகையில், "கடந்தாண்டை விடவும் இந்தாண்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 225 காளைகள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது. பார்வையாளர்கள் போட்டிகளைக் காண்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மது அருந்தி காளைகளைப் பிடித்திட மாடுபிடி வீரர்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது. காலை 8 மணியிலிருந்து 2 மணிவரை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில் பாதுகாப்புப் பணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஜல்லிக்கட்டுப் பணிகளை ஆய்வுசெய்யும் மாவட்ட ஆட்சியர்

போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ஆயுள் காப்பீட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விபத்துகள் இல்லாத, யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் போட்டிகளைச் சிறப்பான முறையில் நடத்திடுவதற்குரிய அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - காளைகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன14

ஈரோடு ஜல்லிக்கட்டில் 225 காளைகள் பங்கேற்பு - மாவட்ட ஆட்சியர்!

ஜல்லிக்கட்டுப் பேரவையின் சார்பில் இரண்டாவது ஆண்டாக ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் இந்தாண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 225 காளைகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும், போட்டியில் கலந்து கொள்ளவுள்ள காளைகள் மற்றும் காளைபிடி வீரர்களுக்கும், போட்டியைக் காணும் பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பு வசதிகளை அதிக கவனத்துடன் மேற்கொண்டுள்ளதாக ஜல்லிக்கட்டு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் பேரவையின் சார்பில் இரண்டாவது ஆண்டாக ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்திலுள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வருகிற 18ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள 10 ஏக்கருக்கும் மேற்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

போட்டியில் கலந்து கொள்ளவுள்ள காளைகள் பரிசோதனை செய்யும் இடம், மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யும் இடம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனை செய்யும் இடம், காளைகள் விடும் வாடிவாசல் பகுதி, பார்வையாளர்கள் அமர்விடம், காளைகள் மற்றும் மாடிபிடி வீரர்கள் காயம்பட்டால் அவர்களை அழைத்துச் செல்வதற்குரிய ஆம்புலன்ஸ் வசதி, கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்யும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

மேலும் போட்டி நடைபெறவுள்ள சமயங்களில் அனைத்து மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் தயாரான நிலையிலும், போட்டியின் போது காயம்படும் காளைகளை எடுத்துச் செல்வதற்குரிய ஆம்புலன்ஸ் மற்றும் மாடுபிடி வீரர்களை கொண்டு செல்லும் வாகனங்களும் தயார் நிலையிலும் முதலுதவி வழங்குவதற்குரிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் இடத்தில் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்தும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துபவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறுகையில், கடந்தாண்டை விடவும் இந்தாண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 225 காளைகள் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும், பார்வையாளர்கள் போட்டிகளைக் காண்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Body:மேலும் மதுவகைகளை அருந்தி விட்டு காளைகளைப் பிடித்திட மாடுபிடி வீரர்களுக்கு கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது என்றும், காலை 8 மணியிலிருந்து 2 மணி வரை ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில் பாதுகாப்புப் பணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் தெரிவித்தார்..

Conclusion:போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ஆயுள் காப்பீட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்துக்களில்லாத யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் போட்டிகளை சிறப்பான முறையில் நடத்திடுவதற்குரிய அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அப்போது அவர் தெரிவித்தார்.

பேட்டி : சி.கதிரவன் – மாவட்ட ஆட்சியர்..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.