ETV Bharat / state

ஒரே ஆசிரியரைக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளி - கூடுதல் ஆசிரியர் கேட்டு பெற்றோர் கோரிக்கை! - Parents appeal to the ruler for additional teacher in Erode

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தில் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளிக்குக் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பெற்றோர்கள் மனு
author img

By

Published : Nov 11, 2019, 8:07 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தம் 160 குழந்தைகள் படித்து வருகின்றனர். ஆனால், இப்பள்ளியில் கடந்த ஓராண்டாக ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், ஆசிரியர் பற்றாக்குறையால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகப் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஒரே ஆசிரியரைக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளி

இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தனர். எனவே, குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு அரசும், மாவட்ட நிர்வாகமும் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் வந்து பெற்றோர்கள் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் மாணவி உயிரிழப்பு - இறப்பில் சந்தேகத்தைக் கிளப்பும் பெற்றோர்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தம் 160 குழந்தைகள் படித்து வருகின்றனர். ஆனால், இப்பள்ளியில் கடந்த ஓராண்டாக ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், ஆசிரியர் பற்றாக்குறையால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகப் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஒரே ஆசிரியரைக் கொண்டு செயல்படும் அரசுப் பள்ளி

இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தனர். எனவே, குழந்தைகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு அரசும், மாவட்ட நிர்வாகமும் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் வந்து பெற்றோர்கள் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் மாணவி உயிரிழப்பு - இறப்பில் சந்தேகத்தைக் கிளப்பும் பெற்றோர்!

Intro:ஈரோடு ஆனந்த்
நவ11

ஒரே ஆசிரியரை கொண்டு செயல்படும் அரசுப் பள்ளி - கூடுதல் ஆசிரியர் கேட்டு ஆட்சியரிடம் பெற்றோர் மனு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தில் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கும் அரசு தொடக்க பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 160 குழந்தைகள் படித்து வரும் இப்பள்ளியில் கடந்த ஓராண்டாக ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Body:மேலும் ஆசிரியர் பற்றாக்குறையால் சிறார்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார் கூறிய பெற்றோர், இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்தனர். 5 ம் வகுப்பு பொது தேர்வு என அரசு அறிவித்துள்ள நிலையில், ஆசிரியர்களே இல்லாத இந்த பள்ளியில் பயிலும் தங்களின் குழந்தைகள் எப்படி எதிர்கொள்வார்கள் என கேள்வி எழுப்பினர்.

Conclusion:குழந்தைகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அரசும் மாவட்ட நிர்வாகமும் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது குழந்தைகளுடன் வந்து மனு அளித்தனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.