ETV Bharat / state

29 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே பெரியகொடிவேரியில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது குடும்பத்தினர்களுடன் தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை சந்தித்து மகிழ்ந்தனர்.

author img

By

Published : May 6, 2019, 3:24 PM IST

old-student

ஈரோடு மாவட்டத்தில்1989, 1990களில் பத்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது குடும்பத்தினருடன் நண்பர்களை சந்திப்பது என முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் தாங்கள் படித்த பெரியகொடிவேரியில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் சக நண்பர்களுடன் பாடம் கற்பித்த ஆசிரியர்களையும் சந்தித்து அவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என நினைத்தனர். இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது குடும்ப அங்கத்தினர்களுடன் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி மகிழ்ந்தனர்.

29 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

பாடம் கற்பித்த ஆசிரியர்களை மேடை ஏற்றி ஒவ்வொருவருக்கும் மாலை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டு தெரிவித்தனர். அதன் பின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து, முன்னாள் மாணவ-மாணவிகளின் பிள்ளைகள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி, கலை நிகழ்ச்சியையும் நடத்தினர். மேலும், தாங்கள் பயின்ற வகுப்பறைக்குச் சென்று ஆனந்தம் அடைந்தனர். இந்தச் சந்திப்புகளை நினைவுகூறும் விதமாக பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டு, அனைவரும் ஒன்றுசேர்ந்து அறுசுவை உணவருந்தி மகிழ்ந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில்1989, 1990களில் பத்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் 29 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது குடும்பத்தினருடன் நண்பர்களை சந்திப்பது என முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் தாங்கள் படித்த பெரியகொடிவேரியில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் சக நண்பர்களுடன் பாடம் கற்பித்த ஆசிரியர்களையும் சந்தித்து அவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என நினைத்தனர். இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது குடும்ப அங்கத்தினர்களுடன் பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி மகிழ்ந்தனர்.

29 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

பாடம் கற்பித்த ஆசிரியர்களை மேடை ஏற்றி ஒவ்வொருவருக்கும் மாலை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டு தெரிவித்தனர். அதன் பின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து, முன்னாள் மாணவ-மாணவிகளின் பிள்ளைகள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி, கலை நிகழ்ச்சியையும் நடத்தினர். மேலும், தாங்கள் பயின்ற வகுப்பறைக்குச் சென்று ஆனந்தம் அடைந்தனர். இந்தச் சந்திப்புகளை நினைவுகூறும் விதமாக பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டு, அனைவரும் ஒன்றுசேர்ந்து அறுசுவை உணவருந்தி மகிழ்ந்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரியகொடிவேரியில் செயல்பட்டுவரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 1989 மற்றும் 90ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்து முடிந்த மாணவர்கள் தங்களது குடும்பத்தினர்களுடன் பாடம் கற்பித்த ஆசிரியர்களை சந்தித்து மகிழ்ந்தனர்… 

டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

TN_ERD_SATHY_03_06_ALUMINI_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரியகொடிவெரியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 1989 மற்றும் 90ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் 29 ஆண்களுக்கு பிறகு அனைவரும் தங்களது குடும்பத்தினர்களுடன் நண்பர்களை சந்திப்பது என முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் ஒன்றாக படித்த சக நண்பர்களுடன் பாடம் கற்பித்த ஆசிரியர்களைளும் சந்தித்து அவர்களை கவுரவப்படுத்தவேண்டும் என எண்ணினர். அதன் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது குடும்ப அங்கத்தினர்களுடன் பள்ளி வளாகத்தில் ஒன்று கூறி மகிழ்ந்தனர். பாடம் கற்பித்த ஆசிரியர்களை மேடை ஏற்றி ஒவ்வொருவருக்கும் மாலை அணித்து நினைப்பு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். அதன் பின்னர் அனைவரும் ஒன்றாக குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மாணவ மாணவிகளின் குடும்பம் குறித்தும் அவர்களது பிள்ளைகள் குறித்து தனித்தனியாக அறிமுகப்படுத்திக்கொண்டனர். முன்னாள் மாணவ மாணவிகளின் பிள்ளைகளின் தனித்திறமைகளை வெளிப்படுத்தி நண்பர்களின் பாராட்டுக்களை பெற செய்தனர். மேலும் முன்னாள் மாணவ மாணவிகளின் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக பள்ளி நாட்களை நினைவு கூர்ந்து மகிழந்தனர். தாங்கள் பயின்ற வகுப்பறைக்கு சென்று ஆனந்தனம் அடைந்தனர். இச்சந்திப்பு 29 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றதை நினைவு கூறும் விதமாக பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டனர். அதன் பின்னர் அனைவரும் அறுசுவை உணவருந்தி மகிழ்ந்து ஆர்பரித்தனர். முன்னாள் பள்ளி மாணவர்கள் சந்திப்பால் அப்பள்ளி வளாகம் திருவிழா கோலம் பூண்டிருந்தது. 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.