ETV Bharat / state

2 லட்சம் முட்டைகள் வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்! - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பொதுமக்களுக்குத் தேவையான இரண்டு லட்சம் முட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

2 லட்சம் முட்டைகள் வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்!
2 லட்சம் முட்டைகள் வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்!
author img

By

Published : May 5, 2020, 2:18 PM IST

Updated : May 5, 2020, 3:00 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு முட்டை விநியோகிக்கப்படுகிறது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் தேவையான முட்டைகளை ஒப்படைத்து வாகனங்கள் மூலம் அனுப்பிவைத்தார்.

கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 2 லட்சம் முட்டைகளை விநியோகம் செய்த செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கரோனா தொற்றின் தாக்கம் குறைந்தவுடன் ஜூன் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ஆம் தேதிவரை அதிமுக சார்பில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொற்றில்லா மாவட்டமாக மாற்றிய மக்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்கியிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் அரசின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: 'தங்கு தடையில்லாமல் ரேஷன் பொருட்களை வழங்குகிறோம்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு முட்டை விநியோகிக்கப்படுகிறது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் தேவையான முட்டைகளை ஒப்படைத்து வாகனங்கள் மூலம் அனுப்பிவைத்தார்.

கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 2 லட்சம் முட்டைகளை விநியோகம் செய்த செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கரோனா தொற்றின் தாக்கம் குறைந்தவுடன் ஜூன் மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ஆம் தேதிவரை அதிமுக சார்பில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொற்றில்லா மாவட்டமாக மாற்றிய மக்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்கியிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் அரசின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: 'தங்கு தடையில்லாமல் ரேஷன் பொருட்களை வழங்குகிறோம்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Last Updated : May 5, 2020, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.