ETV Bharat / state

அதிக பாரத்தால் திம்பம் மலைப்பகுதி தடுப்புச்சுவரை உடைத்து நின்ற லாரி!

author img

By

Published : Jan 23, 2020, 2:19 PM IST

ஈரோடு: திம்பம் வனப்பகுதியில் அதிக பாரங்களை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதை தடுப்புச்சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

lorry
lorry

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில், 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடைய 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.

அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிகள் திம்பம் மலைப்பாதையில் பாரம் தாங்காமல் நின்றுவிடுவதும், கவிழ்ந்து விபத்து ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக வந்துகொண்டிருந்தது.

அப்போது 21ஆவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதை தடுப்புச்சுவரின்மீது மோதி நகரமுடியாமல் நின்றது. லாரி சாலையோரம் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல் ஆசனூர் அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதையும் படிங்க: வெள்ளி அருவி அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில், 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடைய 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.

அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிகள் திம்பம் மலைப்பாதையில் பாரம் தாங்காமல் நின்றுவிடுவதும், கவிழ்ந்து விபத்து ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக வந்துகொண்டிருந்தது.

அப்போது 21ஆவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதை தடுப்புச்சுவரின்மீது மோதி நகரமுடியாமல் நின்றது. லாரி சாலையோரம் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல் ஆசனூர் அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதையும் படிங்க: வெள்ளி அருவி அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து

Intro:Body:tn_erd_02_sathy_timbam_lorry_photo_tn10009

திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரை உடைத்து நின்ற லாரி
திம்பம் மலைப்பாதையில் லாரி தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரிஅம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டைஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம் கர்நாடக மாநிலங்களுக்கிடைய 24 மணி நேரமும் பஸ் மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதிக பாரம் ஏற்றி செல்லும் சரக்கு லாரிகள் திம்பம் மலைப்பாதையில் பாரம் தாங்காமல் நின்றுவிடுவதும், கவிழ்ந்து விபத்து ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து அரிசி பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. 21 வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதைய«£ர தடுப்புச்சுவரின் மீது மோதி நகரமுடியாமல் நின்றது. லாரி சாலையோரம் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல் ஆசனூர் அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி சா«லையாரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.