ETV Bharat / state

உயர்மின் கோபுர திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மேல்முறையீடு!

author img

By

Published : Jun 27, 2019, 3:06 PM IST

ஈரோடு: உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய இருப்பதாக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் முடிவு செய்துள்ளது.

விவசாயிகள்

திருப்பூர் மாவட்டம் புதிய புகளூரில் இருந்து ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை 800 கே.வி மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாய விளைநிலங்கள் வழியாக மின் பாதை கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

மேலும், உயர்மின் கோபுரங்கள் செல்லும் வழித்தடத்தில் உயர் அழுத்த மின்சாரம் செல்வதால், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. மின் பாதையின் கீழ் எந்தவித மின் இணைப்பும் இல்லாமல் மின்விளக்குகள் எரிவதையும் விவாயிகள் செயல்முறை விளக்கத்துடன் சென்னை நீதிமன்றத்தில் சமர்பித்து மின் கோபுரம் அமைப்பதற்கு தடைகேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

விவசாய சங்கம்

இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள், மின்பாதையின் கீழ் ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தியும் மின் இணைப்பு இல்லாமல் விளக்குகள் எரிவதை செயல்விளக்கம் செய்து காட்டியதை பாஜகவினர் தவறான தகவல் என்று சொல்வது ஏற்புடையதல்ல. மேலும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியானதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

தொடர்ந்து எங்களது கோரிக்கைகள் குறித்து மக்களவை உறுப்பினர்கள் மூலம் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க செய்வோம் என்றனர்.

திருப்பூர் மாவட்டம் புதிய புகளூரில் இருந்து ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை 800 கே.வி மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாய விளைநிலங்கள் வழியாக மின் பாதை கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

மேலும், உயர்மின் கோபுரங்கள் செல்லும் வழித்தடத்தில் உயர் அழுத்த மின்சாரம் செல்வதால், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. மின் பாதையின் கீழ் எந்தவித மின் இணைப்பும் இல்லாமல் மின்விளக்குகள் எரிவதையும் விவாயிகள் செயல்முறை விளக்கத்துடன் சென்னை நீதிமன்றத்தில் சமர்பித்து மின் கோபுரம் அமைப்பதற்கு தடைகேட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

விவசாய சங்கம்

இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள், மின்பாதையின் கீழ் ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தியும் மின் இணைப்பு இல்லாமல் விளக்குகள் எரிவதை செயல்விளக்கம் செய்து காட்டியதை பாஜகவினர் தவறான தகவல் என்று சொல்வது ஏற்புடையதல்ல. மேலும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியானதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

தொடர்ந்து எங்களது கோரிக்கைகள் குறித்து மக்களவை உறுப்பினர்கள் மூலம் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க செய்வோம் என்றனர்.

Intro:ஈரோடு 27.06.2019
சதாசிவம்
விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் முடிவு செய்துள்ளது...
திருப்பூர் மாவட்டம் புதிய புகளூரில் இருந்து தமிழகத்தின் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை 800கே.வி மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது..இந்நிலையில் மின் பாதை கொண்டு செல்ல விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்..உயர்மின் கோபுரங்கள் செல்லும் வழித்திடத்தில் உயர் அழுத்த மின்சாரம் செல்வதால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுவதாகவும், மின் பாதையின் கீழாக எவ்வித மின் இணைப்பும் இல்லாமல் மின்விளக்குகள் எரிவதையும் விவாயிகள் செயல்முறை விளக்கத்துடன் சென்னை நீதிமன்றத்தில் சமர்பித்து மின் கோபுரம் அமைப்பதற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்..இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 11விவசாயிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது..இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள், மின்பாதையின் கீழ்பகுதியில் விவசாயிகளும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியும் மின் இணைப்ப இன்றி விளக்குகள் எரிவதை செயல்விளக்கம் செய்ததை பாரதியஜனதா கட்சியினர் தவறான தகவல் என்று சொல்வது ஏற்புடையதல்ல என்றனர்..மேலும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியானதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.. Body:ஈரோடு 27.06.2019
சதாசிவம்
விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் முடிவு செய்துள்ளது...
திருப்பூர் மாவட்டம் புதிய புகளூரில் இருந்து தமிழகத்தின் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை 800கே.வி மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது..இந்நிலையில் மின் பாதை கொண்டு செல்ல விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்..உயர்மின் கோபுரங்கள் செல்லும் வழித்திடத்தில் உயர் அழுத்த மின்சாரம் செல்வதால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுவதாகவும், மின் பாதையின் கீழாக எவ்வித மின் இணைப்பும் இல்லாமல் மின்விளக்குகள் எரிவதையும் விவாயிகள் செயல்முறை விளக்கத்துடன் சென்னை நீதிமன்றத்தில் சமர்பித்து மின் கோபுரம் அமைப்பதற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்..இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 11விவசாயிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது..இந்நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள், மின்பாதையின் கீழ்பகுதியில் விவசாயிகளும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியும் மின் இணைப்ப இன்றி விளக்குகள் எரிவதை செயல்விளக்கம் செய்ததை பாரதியஜனதா கட்சியினர் தவறான தகவல் என்று சொல்வது ஏற்புடையதல்ல என்றனர்..மேலும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியானதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.