ETV Bharat / state

நிதி நிறுவனங்கள் பணம் கேட்டு தொந்தரவு: போராட்டல் குதித்த நெசவாளர்கள்!

ஈரோடு: கொடுத்த கடனை அதிக வட்டியுடன் திரும்பச் செலுத்துமாறு நிதி நிறுவனங்கள் நிர்பந்திப்பதால் நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Jun 3, 2020, 3:34 PM IST

நிதி நிறுவனங்கள் பணம் கேட்டும் தொந்தரவால் போராட்டல் குதித்த நெசவாளர்கள்
நிதி நிறுவனங்கள் பணம் கேட்டும் தொந்தரவால் போராட்டல் குதித்த நெசவாளர்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் உள்ளன.

கைத்தறி நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் சுயஉதவிக்குழு போன்று தனிக்குழுவாகச் சேர்ந்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். ஒருவருக்கொருவர் பிணை போட்டுள்ளனர். ஒருவர் கட்டவில்லை என்றாலும் அந்தக் குழுவில் உள்ள பெண்கள் பொறுப்பேற்க வேண்டும்.

இந்தக் கடன் தொகையை வாரம் ஒருமுறை, வட்டியுடன் கட்டி வந்தனர். கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில், தற்போது ஊடரங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால், வறுமையில் வாடும் நெசவாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த சில நாள்களாக பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் கடன் வாங்கிய நெசவாளர்களிடம் கடனை திருப்பிச் செலுத்துமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழுவில் உள்ள பெண்கள், தற்போது வேலையில்லாத நிலையில் கடனைத் தாமதமாகத் திருப்பிச் செலுத்த உதவுமாறு கோரினர்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து கடனைத் திரும்பிச் செலுத்துமாறு வீட்டிக்கு வந்த தொந்தரவு செய்வதாகப் புகார் தெரிவித்து நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிப்போம் என்றும் அரசு நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: ஈரோட்டில் புதிதாக இருவருக்கு கரோனா தொற்று!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் உள்ளன.

கைத்தறி நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் சுயஉதவிக்குழு போன்று தனிக்குழுவாகச் சேர்ந்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். ஒருவருக்கொருவர் பிணை போட்டுள்ளனர். ஒருவர் கட்டவில்லை என்றாலும் அந்தக் குழுவில் உள்ள பெண்கள் பொறுப்பேற்க வேண்டும்.

இந்தக் கடன் தொகையை வாரம் ஒருமுறை, வட்டியுடன் கட்டி வந்தனர். கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில், தற்போது ஊடரங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால், வறுமையில் வாடும் நெசவாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த சில நாள்களாக பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் கடன் வாங்கிய நெசவாளர்களிடம் கடனை திருப்பிச் செலுத்துமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழுவில் உள்ள பெண்கள், தற்போது வேலையில்லாத நிலையில் கடனைத் தாமதமாகத் திருப்பிச் செலுத்த உதவுமாறு கோரினர்.

ஆனால் அவர்கள் தொடர்ந்து கடனைத் திரும்பிச் செலுத்துமாறு வீட்டிக்கு வந்த தொந்தரவு செய்வதாகப் புகார் தெரிவித்து நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிப்போம் என்றும் அரசு நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: ஈரோட்டில் புதிதாக இருவருக்கு கரோனா தொற்று!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.