ETV Bharat / state

மருத்துவரின் தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழப்பு !

author img

By

Published : Nov 20, 2019, 11:20 PM IST

ஈரோடு: சிறுமிக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர் ஈரோடு எஸ்பியிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sadhana death

ஈரோடு மாவட்டம் சூளையைச் சேர்ந்த தம்பதி சதீஸ்குமார் -பிரபாவதி. இவர்களது மகள் சாதனா (7) ஈரோடு பவானி சாலையில் உள்ள தனியார் கிறிஸ்து ஜோதி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், சாதனாவுக்கு நவம்பர் 9ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பள்ளியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் சிறுமி சாதனாவிற்கு மருத்துவர் திருமூர்த்தி சிகிச்சையளித்துள்ளார். தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சாதனா நவம்பர் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், பவானி சாலையில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான பள்ளியில் உள்ள மருத்துவமனை மருத்துவர் திருமூர்த்தியின் தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காரணமான மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு எஸ்பி சக்திகணேசனிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

என் மகள் இறப்பில் மர்மம் இருக்கு

மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட நபரைத் தாக்கிய திமுக பிரமுகர்!

ஈரோடு மாவட்டம் சூளையைச் சேர்ந்த தம்பதி சதீஸ்குமார் -பிரபாவதி. இவர்களது மகள் சாதனா (7) ஈரோடு பவானி சாலையில் உள்ள தனியார் கிறிஸ்து ஜோதி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், சாதனாவுக்கு நவம்பர் 9ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பள்ளியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் சிறுமி சாதனாவிற்கு மருத்துவர் திருமூர்த்தி சிகிச்சையளித்துள்ளார். தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சாதனா நவம்பர் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், பவானி சாலையில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான பள்ளியில் உள்ள மருத்துவமனை மருத்துவர் திருமூர்த்தியின் தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காரணமான மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு எஸ்பி சக்திகணேசனிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

என் மகள் இறப்பில் மர்மம் இருக்கு

மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட நபரைத் தாக்கிய திமுக பிரமுகர்!

Intro:ஈரோடு ஆனந்த்
நவ20

மருத்துவரின் தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழப்பு என புகார்!

ஈரோட்டில் சிறுமிக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர் ஈரோடு எஸ்பியிடம் மனு அளித்துள்ளனர்.

ஈரோடு சூளையை சேர்ந்த கூலி தொழிலாளி சதீஸ்குமார்.இவரது மனைவி பிரபாவதி.இவர்களது மகள் 7 வயது சிறுமி சாதனா. ஈரோடு பவானி சாலையில் உள்ள தனியார் கிறிஸ்து ஜோதி பள்ளியில் 2 ம் வகுப்பு படித்து வந்த சாதனாவுக்கு கடந்த 9 ம் தேதி திடீர் உடல்தலகுறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பள்ளியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் மருத்துவர் திருமூர்த்தி சிகிச்சை அளித்துள்ளார். தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து சிறுநீரகம்,கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Body:பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கடந்த 13 ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தநிலையில் தனியார் மருத்துவமனை மருத்துவர் திருமூர்த்தியின் தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்ததாகவும் இதற்கு காரணமான மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு எஸ்பி சக்திகணேசனிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

Conclusion:மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி : பிரபாவதி,சதீஷ்குமார் சிறுமியின் பெற்றோர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.