ETV Bharat / state

ஈரோட்டில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்: வனத்துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் - சிறுத்தை தப்பியோடிய நிகழ்வை படம் பிடித்த செய்தியாளர்கள் மீது தாக்குதல்

ஈரோட்டில் நேற்று கூண்டில் சிக்கிய சிறுத்தையை பற்றி செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய வனத்துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 18க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் வனச்சரக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
வனத்துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jul 1, 2022, 10:41 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடியில் சுற்றித்திரிந்த சிறுத்தைக்கு வனத்துறையினர் கூண்டு வைத்து நேற்று (ஜூன் 30) பிடித்தனர். கூண்டின் அடிபாகம் சேதமடைந்ததால் சிறுத்தைக்கு மயக்கமருந்து செலுத்தி வேறு ஒரு கூண்டுக்கு மாற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

மயக்க நிலையில் இருந்த சிறுத்தை திடீரென தப்பியோடியது. வனத்துறையினர் சிறுத்தையை தேடி பார்த்தபோது குவாரியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் அதைப் பிடித்தனர். இந்த நிகழ்வை படம் பிடித்த தாளவாடி தினசரி பத்திரிகையாளர் கணேசன், தாளவாடி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முருகானந்தம் ஆகியோரை வனத்துறையினர் தாக்கியதுடன் செல்போனை உடைத்து சேதப்படுத்தினர்.

வனத்துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் இன்று(ஜூலை 1) பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியமங்கம் மற்றும் தாளவாடி ஆசனூர் வனச்சரக அலுவலகம் முன் 18க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் தேவேந்திரா குமார் மீனாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தெங்குமரஹாடா வனப்பகுதியில் சிறுத்தை விடுவிப்பு!

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடியில் சுற்றித்திரிந்த சிறுத்தைக்கு வனத்துறையினர் கூண்டு வைத்து நேற்று (ஜூன் 30) பிடித்தனர். கூண்டின் அடிபாகம் சேதமடைந்ததால் சிறுத்தைக்கு மயக்கமருந்து செலுத்தி வேறு ஒரு கூண்டுக்கு மாற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

மயக்க நிலையில் இருந்த சிறுத்தை திடீரென தப்பியோடியது. வனத்துறையினர் சிறுத்தையை தேடி பார்த்தபோது குவாரியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் அதைப் பிடித்தனர். இந்த நிகழ்வை படம் பிடித்த தாளவாடி தினசரி பத்திரிகையாளர் கணேசன், தாளவாடி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முருகானந்தம் ஆகியோரை வனத்துறையினர் தாக்கியதுடன் செல்போனை உடைத்து சேதப்படுத்தினர்.

வனத்துறை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் இன்று(ஜூலை 1) பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சத்தியமங்கம் மற்றும் தாளவாடி ஆசனூர் வனச்சரக அலுவலகம் முன் 18க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் தேவேந்திரா குமார் மீனாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தெங்குமரஹாடா வனப்பகுதியில் சிறுத்தை விடுவிப்பு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.