ETV Bharat / state

கோபி அருகே கத்தியால் குத்தப்பட்ட பெண் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 7, 2020, 12:43 PM IST

ஈரோடு: கோபி அருகே அடையாளம் தெரியாத நபர்களால் பெண் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

erode murder issue
erode murder issue

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரியமொடச்சூர் பகுதியில் மேரி(45) என்பவர் தள்ளுவண்டிக்கடையில் துணி வியாபாரம் செய்துவந்தார். கணவர் தமிழ்தாசன் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேரிக்கு ஐந்து மகள்களில் இரண்டு பேருக்கு திருமணமான நிலையில் மூன்று பேர் தனியார் நூற்பாலையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு மேரி வீட்டுக்கு மகள் அன்னமேரி மற்றும் மருமகன் புஷ்பராஜ் வந்தனர். அவர்கள் வெளியே நின்று பேசிகொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மேரியிடம் கடைசி மகளை திருமணம் செய்து தர மறுக்கிறாயா என கேட்டு அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதை பார்த்து தடுக்க வந்த பக்கத்து வீட்டுகாரர் கணேசன் என்பவரையும் தாக்கிவிட்டு தப்பியோடினர். அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் காயமடைந்த மேரி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

8 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்: ஒருவர் கைது!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரியமொடச்சூர் பகுதியில் மேரி(45) என்பவர் தள்ளுவண்டிக்கடையில் துணி வியாபாரம் செய்துவந்தார். கணவர் தமிழ்தாசன் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேரிக்கு ஐந்து மகள்களில் இரண்டு பேருக்கு திருமணமான நிலையில் மூன்று பேர் தனியார் நூற்பாலையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு மேரி வீட்டுக்கு மகள் அன்னமேரி மற்றும் மருமகன் புஷ்பராஜ் வந்தனர். அவர்கள் வெளியே நின்று பேசிகொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மேரியிடம் கடைசி மகளை திருமணம் செய்து தர மறுக்கிறாயா என கேட்டு அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதை பார்த்து தடுக்க வந்த பக்கத்து வீட்டுகாரர் கணேசன் என்பவரையும் தாக்கிவிட்டு தப்பியோடினர். அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் காயமடைந்த மேரி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

8 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்: ஒருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.