ETV Bharat / state

மழையால் 4 ஆயிரம் ஏக்கர் வாழை, கரும்பு பயிர் சேதம் - விவசாயிகள் வேதனை! - erode farmers asks compensation for banana tree

ஈரோடு: கன மழையில் லக்காபுரம் அருகே கருக்கம்பாளையத்தில் 70க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததுடன், வயல்களிலும் நீர் புகுந்ததால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை, கரும்பு, நெற்பயிர்கள் சேதமடைந்தன.

banana trees
author img

By

Published : Nov 8, 2019, 8:59 PM IST

ஈரோட்டில் வெண்டிபாளையம் நுழைவு பாலத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்றிரவு பெய்த கனமழையால் நுழைவு பாலத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதியைக் கடக்க வாகனங்களுக்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் அங்கு இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

மழையால் 4 ஆயிரம் ஏக்கர் வாழை, கரும்பு பயிர் சேதம்

மேலும் லக்காபுரம் அருகே கருக்கம்பாளையத்தில் மழையால் வாய்க்கால் நிறைந்து, மழை நீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததால் 70க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள வயல்களுக்குள் மழை நீர் புகுந்து பயிரிடப்பட்டிருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை, கரும்பு, நெற்பயிர்கள் சேதமாகின.

வாய்க்கால் நீர், வீட்டிற்குள் புகாமல் தடுக்க தடுப்புச்சுவரை அரசு கட்டிக் கொடுத்து, தங்களின் வீடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் வயல்களுக்குள் புகுந்த மழை நீரால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

பாதிப்படைந்த விவசாயி பேட்டி

மேலும் படிக்க: நீலகிரியில் தொடர் மழை - அழுகிய நிலையில் பூக்கள்!

ஈரோட்டில் வெண்டிபாளையம் நுழைவு பாலத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்றிரவு பெய்த கனமழையால் நுழைவு பாலத்தில் தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதியைக் கடக்க வாகனங்களுக்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் அங்கு இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

மழையால் 4 ஆயிரம் ஏக்கர் வாழை, கரும்பு பயிர் சேதம்

மேலும் லக்காபுரம் அருகே கருக்கம்பாளையத்தில் மழையால் வாய்க்கால் நிறைந்து, மழை நீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்ததால் 70க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள வயல்களுக்குள் மழை நீர் புகுந்து பயிரிடப்பட்டிருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை, கரும்பு, நெற்பயிர்கள் சேதமாகின.

வாய்க்கால் நீர், வீட்டிற்குள் புகாமல் தடுக்க தடுப்புச்சுவரை அரசு கட்டிக் கொடுத்து, தங்களின் வீடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் வயல்களுக்குள் புகுந்த மழை நீரால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

பாதிப்படைந்த விவசாயி பேட்டி

மேலும் படிக்க: நீலகிரியில் தொடர் மழை - அழுகிய நிலையில் பூக்கள்!

Intro:ஈரோடு ஆனந்த்
நவ.08

மழையால் 4 ஆயிரம் ஏக்கர் வாழை, கரும்பு சேதம் : விவசாயிகள் வேதனை!

ஈரோட்டில் நேற்றிரவு பெய்த மழையில் லக்காபுரம் அருகே கருக்கம்பாளையத்தில் 70 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததுடன் வயல்களிலும் நீர் புகுந்ததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை, கரும்பு, நெற்பயிர்கள் சேதமடைந்தன.

Body:ஈரோட்டில் நேற்று நள்ளிரவில் கனமழை பெய்தது.பழைய கரூர் சாலையில் உள்ள வெண்டிபாளையம் நுழைவு பாலத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும், மினி பேருந்துகளும் சென்று வருகின்றன. நேற்றிரவு பெய்த கன மழையால் நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்கியது. தண்ணீர் சூழ்ந்ததால் இப்பகுதியில் இயங்கி வரும் அரசு நடுநிலை பள்ளிக்கும் விடுமுறை விடப்பட்டது.

மேலும் லக்காபுரம் அருகே கருக்கம்பாளையத்தில் பெய்த மழையால் வாய்க்கால் நிறைந்து மழை நீர் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் 70க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின. மேலும் அருகில் உள்ள வயல்களுக்குள் மழை நீர் புகுந்து பயிரிடப்பட்டிருந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை, கரும்பு, நெற்பயிர்கள் உள்ளிட்டவை மூழ்கி சேதமடைந்தன.

வாய்க்கால் நீர் வீட்டிற்குள் புகாமல் தடுக்க தடுப்புச்சுவர் கட்டி தங்களின் வீடுகளை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Conclusion:வயல்களுக்குள் புகுந்த மழை நீரால் சேதமடைந்த பயிற்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.