ETV Bharat / state

ஈரோடில் கல்குவாரி குட்டையில் மூழ்கி இரண்டு மாணவர்கள் பலி - kalkuvari 2 students dead

ஈரோடு: கோபிசெட்டிப்பாளையத்தில் விளையாடச் சென்ற மாணவர்கள் இருவர் குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாணவர்கள்
author img

By

Published : Apr 16, 2019, 1:39 PM IST

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்தவர் நந்தகுமார்(16) இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கதிரேசன்(14) ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார்.

நந்தகுமார், கதிரேசன் இருவரும் அவர்களின் நண்பர்களுடன் கல்குவாரி பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நந்தகுமார் அங்கு இருந்த சுமார் 20 அடி ஆழமுள்ள பாழடைந்த கல்குவாரியில் தவறி விழுந்துள்ளார். அதை பார்த்த கதிரேசன், நந்தகுமாரை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அவரும் கல்குவாரியில் விழுந்தார். அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

அதை பார்த்த நண்பர்கள் அலறியடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களின் உறவினர் குழந்தை சாமி என்பவர் கல்குவாரிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி பலியான இருவரை மீட்டார்.

மேலும் இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்விற்கு கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ஈரோடில் நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்தவர் நந்தகுமார்(16) இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கதிரேசன்(14) ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார்.

நந்தகுமார், கதிரேசன் இருவரும் அவர்களின் நண்பர்களுடன் கல்குவாரி பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நந்தகுமார் அங்கு இருந்த சுமார் 20 அடி ஆழமுள்ள பாழடைந்த கல்குவாரியில் தவறி விழுந்துள்ளார். அதை பார்த்த கதிரேசன், நந்தகுமாரை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அவரும் கல்குவாரியில் விழுந்தார். அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.

அதை பார்த்த நண்பர்கள் அலறியடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களின் உறவினர் குழந்தை சாமி என்பவர் கல்குவாரிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி பலியான இருவரை மீட்டார்.

மேலும் இருவரின் உடல்களும் உடற்கூறு ஆய்விற்கு கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ஈரோடில் நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு


TN_ERD_SATHY_01_16_TWO STUDENT_TN10009
(FTP இல் உள்ளது)


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கருதாம்பாடி பகுதியில் கல்குவாரி குட்டை நீரில் விளையாடச்சென்ற புங்கம்பள்ளி பகுதியைச்சேர்ந்த பத்தாம்வகுப்பு மாணவர் நந்தகுமார் அதே பகுதியைச்சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் கதிரேசன் ஆகிய இரு சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழப்பு. மாணவர்களின் உயிரிழப்பு குறித்து சிறுவலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..


ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்தவர் வேலுச்சாமி கறிக்கடை வைத்துள்ளார். இவருக்கு சந்தோ~;குமார்(20), நந்தகுமார்(16) என இரண்டு மகன்கள் உள்ளனர். நந்தகுமார் நம்பியூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வெழுதி உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் விசுவநாதன் கூலித்தொழிலாளி. இவருக்கு திணே~;குமார்(18), கதிரேசன்(14) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுடைய உறவினர் குழந்தைசாமி கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கருதாம்பாடி புதூரில் வசித்து வருகிறார். நாளை சுள்ளிக்கரடு கோயில் திருவிழாவிற்காக குழந்தைசாமியின் வீட்டிற்கு வந்துள்ளனர். தீத்தாம்பாளையம் அருகே உள்ள செரங்கட்டுபுதூர் என்ற இடத்தில் உள்ள மாந்தோப்பில் நந்தகுமார், கதிரேசன் மற்றும் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த போது, எதிர்பாராதவிதமாக நந்தகுமார் அங்கு இருந்த சுமார் 20அடி ஆழமுள்ள பாழடைந்த கல்குவாரியில் தவறி விழுந்துள்ளார். அதை பார்த்த கதிரேசன், நந்தகுமாரை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அதில் இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். அதை பார்த்த நண்பர்கள் அலறியடித்து ஊருக்குள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தைசாமி கல்குவாரிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி பலியான நந்தகுமார் மற்றும் கதிரேசனை மீட்டார். மீட்கப்பட்ட இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரியில் மூழ்கி இரண்டு மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

-
TN_ERD_SATHY_01_16_TWO STUDENT_TN10009
(FTP இல் உள்ளது)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.