ETV Bharat / state

'ஈரோட்டில் தேர்தல் விதிமீறல்கள் அப்பட்டமாக நடைபெறுகிறது' - எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டு

author img

By

Published : Feb 24, 2023, 9:11 PM IST

ஈரோடு இடைத்தேர்தலில் அப்பட்டமாக தேர்தல் விதிமீறல்கள் நடக்கிறது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

கோவை: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகள் குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தோம்.

ஆனால், இதுவரை எந்தப் பயனும் இல்லை. ஆளுங்கட்சியான திமுக, வாக்காளர்களை அழைத்துக் கொண்டு போய் சாப்பாடு போட்டு அவர்களை அடைத்து வைக்கிறார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளன. அனைத்து அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பகிரங்கமாக தேர்தல் விதிமீறல்கள் ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. பலமுறை தேர்தல் விதிமீறல் குறித்து நான் பேசியுள்ளேன். தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும்போதும் அது குறித்து பேசி இருக்கிறேன்.

நேரடியாக ஈரோடு இடைத்தேர்தல் குளறுபடிகள் குறித்து ஊடகங்கள் நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும். ஊடகத்தினருக்கு நேர்மையும் தர்மமும் இருக்கிறது. அதை மீறக் கூடாது. திறந்த வழியில் நடக்கும் விதிமீறல்கள் குறித்து ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம். வாக்காளர்கள் ஓட்டு போட்டு தான் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று முடிவு செய்யப்படும். ஸ்டாலின் ஓட்டு போடுவதில்லை. மக்கள் எந்த தீர்ப்பு கொடுப்பார்கள் என்று தேர்தல் முடிவுக்குப்பின் தான் தெரியவரும்'' எனத் தெரிவித்தார்.

மேலும், ஈரோடு இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுமா இல்லையா என்று நான் எப்படி சொல்ல முடியும் என கேள்வி எழுப்பினார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி ஜனநாயக படுகொலை ஈரோடு இடைத்தேர்தலில் செய்யப்பட்டு இருப்பதாகவும், எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அத்துமீறிய நடவடிக்கைகள் ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினார். ஆடுகளைப் பட்டியில் அடைப்பது போல வாக்காளர்களை ஆளுங்கட்சி அடைத்து வைக்கிறார்கள் என்றும்; இது முழுக்க முழுக்க விதிமீறல் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி, 'நாட்டினுடைய முதலமைச்சர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. ஒன்றரை கோடி அண்ணா திமுக தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் பிரமாண்டமாக அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக வேட்பாளர் கட்டாயம் வெற்றி பெறுவார்' என நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அதிமுக கொடுத்த வெள்ளி டம்ளரில் டீ போடுங்க" - ஈரோட்டில் வைரலாகும் வீடியோ!

செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

கோவை: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகள் குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தோம்.

ஆனால், இதுவரை எந்தப் பயனும் இல்லை. ஆளுங்கட்சியான திமுக, வாக்காளர்களை அழைத்துக் கொண்டு போய் சாப்பாடு போட்டு அவர்களை அடைத்து வைக்கிறார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளன. அனைத்து அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பகிரங்கமாக தேர்தல் விதிமீறல்கள் ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. பலமுறை தேர்தல் விதிமீறல் குறித்து நான் பேசியுள்ளேன். தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும்போதும் அது குறித்து பேசி இருக்கிறேன்.

நேரடியாக ஈரோடு இடைத்தேர்தல் குளறுபடிகள் குறித்து ஊடகங்கள் நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும். ஊடகத்தினருக்கு நேர்மையும் தர்மமும் இருக்கிறது. அதை மீறக் கூடாது. திறந்த வழியில் நடக்கும் விதிமீறல்கள் குறித்து ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம். வாக்காளர்கள் ஓட்டு போட்டு தான் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று முடிவு செய்யப்படும். ஸ்டாலின் ஓட்டு போடுவதில்லை. மக்கள் எந்த தீர்ப்பு கொடுப்பார்கள் என்று தேர்தல் முடிவுக்குப்பின் தான் தெரியவரும்'' எனத் தெரிவித்தார்.

மேலும், ஈரோடு இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுமா இல்லையா என்று நான் எப்படி சொல்ல முடியும் என கேள்வி எழுப்பினார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி ஜனநாயக படுகொலை ஈரோடு இடைத்தேர்தலில் செய்யப்பட்டு இருப்பதாகவும், எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அத்துமீறிய நடவடிக்கைகள் ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினார். ஆடுகளைப் பட்டியில் அடைப்பது போல வாக்காளர்களை ஆளுங்கட்சி அடைத்து வைக்கிறார்கள் என்றும்; இது முழுக்க முழுக்க விதிமீறல் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி, 'நாட்டினுடைய முதலமைச்சர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. ஒன்றரை கோடி அண்ணா திமுக தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் பிரமாண்டமாக அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக வேட்பாளர் கட்டாயம் வெற்றி பெறுவார்' என நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அதிமுக கொடுத்த வெள்ளி டம்ளரில் டீ போடுங்க" - ஈரோட்டில் வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.