ETV Bharat / state

ஊரடங்கு தளர்வு குறித்து தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஈரோடு ஆட்சியர் ஆலோசனை!

ஈரோடு: தொழிற்சாலைகள் குறித்து அதன் உரிமையாளர்கள் அளித்திடும் தகவலைக் கொண்டு நிர்வாகம் அளித்திடும் அறிக்கையின் அடிப்படையிலேயே தொழிற்சாலைகளுக்கு தளர்வு வழங்கிட வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : May 1, 2020, 1:23 PM IST

ஊரடங்கு தளர்வு குறித்து தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஈரோடு ஆட்சியர் ஆலோசனை!
ஊரடங்கு தளர்வு குறித்து தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஈரோடு ஆட்சியர் ஆலோசனை!

கரோனா பெருந்தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு தளர்வளித்திட வேண்டிய முக்கியத் தொழில்கள், தொழிற்சாலைகள் குறித்து மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக அறிக்கைகள் தாக்கல்செய்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் அனைத்துத் தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் உள்நாட்டுத் தொழிலாளர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன் ஆகியவை குறித்த உரிமையாளர்கள் அளிக்கும் தகவல்கள் வெளிப்படைத் தன்மையுடனும், உண்மையின் அடிப்படையில் இருப்பது நல்லது என்றும், உரிமையாளர்கள் அளித்திடும் தகவலைக் கொண்டு மாவட்ட நிர்வாகம் அளித்திடும் அறிக்கையின் அடிப்படையிலேயே தொழிற்சாலைகளுக்குத் தளர்வு வழங்கிட வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், “தொழிற்சாலைகளில் பணியாற்றும் உள்ளூர் தொழிலாளர்கள், வெளிமாவட்ட, வெளிமாநிலத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள விவரம் ஆகியவை குறித்த விவரங்களைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தாக்கல்செய்திட வேண்டும்.

ஊரடங்கு உத்தரவு காலத்திற்குப் பிறகு தொழிற்சாலைகளுக்குத் தளர்வு அளிக்கப்பட்டால் உள்ளூர் தொழிலாளர்களை மட்டும் வைத்து தொழிற்சாலைகளை இயக்குவதற்கான சாத்தியங்கள் குறித்தும் தகவல் தெரிவித்திட வேண்டும்.

ஊரடங்கு தளர்வு குறித்து தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஈரோடு ஆட்சியர் ஆலோசனை!

தொழிற்சாலை உரிமையாளர்கள் தாக்கல்செய்யும் தகவல்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்திட வேண்டுமென்பதால் அனைத்து உரிமையாளர்கள் தாக்கல்செய்திடும் தகவல்கள் வெளிப்படையாகவும், உண்மைத் தன்மையுடனும் இருந்திட வேண்டும்.

உரிமையாளர்கள் வழங்கும் தகவலைக் கொண்டு மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்திடும் அறிக்கையின் அடிப்படையிலேயே தொழிற்சாலைகளுக்குத் தளர்வு வழங்கிட அரசு முடிவுசெய்யும்” என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் ஈரோட்டின் முக்கியத் தொழில்களான சாயம், சலவை, தோல், இரும்பு, அட்டைகள் தயாரித்தல், தீவனங்கள் தயாரிப்புத் தொழிற்சாலை உள்ளிட்ட முக்கியத் தொழில்களை நடத்திவரும் உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : ஊரடங்கு உத்தரவு: எளிமையாக நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமணம்

கரோனா பெருந்தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு தளர்வளித்திட வேண்டிய முக்கியத் தொழில்கள், தொழிற்சாலைகள் குறித்து மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக அறிக்கைகள் தாக்கல்செய்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் அனைத்துத் தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் உள்நாட்டுத் தொழிலாளர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன் ஆகியவை குறித்த உரிமையாளர்கள் அளிக்கும் தகவல்கள் வெளிப்படைத் தன்மையுடனும், உண்மையின் அடிப்படையில் இருப்பது நல்லது என்றும், உரிமையாளர்கள் அளித்திடும் தகவலைக் கொண்டு மாவட்ட நிர்வாகம் அளித்திடும் அறிக்கையின் அடிப்படையிலேயே தொழிற்சாலைகளுக்குத் தளர்வு வழங்கிட வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், “தொழிற்சாலைகளில் பணியாற்றும் உள்ளூர் தொழிலாளர்கள், வெளிமாவட்ட, வெளிமாநிலத் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறன், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள விவரம் ஆகியவை குறித்த விவரங்களைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தாக்கல்செய்திட வேண்டும்.

ஊரடங்கு உத்தரவு காலத்திற்குப் பிறகு தொழிற்சாலைகளுக்குத் தளர்வு அளிக்கப்பட்டால் உள்ளூர் தொழிலாளர்களை மட்டும் வைத்து தொழிற்சாலைகளை இயக்குவதற்கான சாத்தியங்கள் குறித்தும் தகவல் தெரிவித்திட வேண்டும்.

ஊரடங்கு தளர்வு குறித்து தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஈரோடு ஆட்சியர் ஆலோசனை!

தொழிற்சாலை உரிமையாளர்கள் தாக்கல்செய்யும் தகவல்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்திட வேண்டுமென்பதால் அனைத்து உரிமையாளர்கள் தாக்கல்செய்திடும் தகவல்கள் வெளிப்படையாகவும், உண்மைத் தன்மையுடனும் இருந்திட வேண்டும்.

உரிமையாளர்கள் வழங்கும் தகவலைக் கொண்டு மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்திடும் அறிக்கையின் அடிப்படையிலேயே தொழிற்சாலைகளுக்குத் தளர்வு வழங்கிட அரசு முடிவுசெய்யும்” என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் ஈரோட்டின் முக்கியத் தொழில்களான சாயம், சலவை, தோல், இரும்பு, அட்டைகள் தயாரித்தல், தீவனங்கள் தயாரிப்புத் தொழிற்சாலை உள்ளிட்ட முக்கியத் தொழில்களை நடத்திவரும் உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : ஊரடங்கு உத்தரவு: எளிமையாக நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.