ETV Bharat / state

சத்தியமங்கலம் நகர்ப் பகுதியில் புழுக்களுடன் குடிநீர் - பொதுமக்கள் போராட்டம் - Distributed drinking water with worms in Sathyamangalam urban area

சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் புழுக்களுடன் குடிநீர் விநியோகிக்கப்பட்டதால் நேற்று (ஜனவரி 18) செவ்வாய்க்கிழமை ரங்கசமுத்திரம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் புழுக்களுடன் விநியோகிக்கப்பட்ட குடிநீர்
சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் புழுக்களுடன் விநியோகிக்கப்பட்ட குடிநீர்
author img

By

Published : Jan 19, 2022, 11:58 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 40 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதிக்கு பவானி ஆற்றிலிருந்து குடிநீர் எடுத்துச் சுத்திகரிக்கப்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 24, 25ஆவது வார்டுகளில் உள்ள கோவிந்தராஜபுரம், மூணு வீடு, பரிசல் துறை வீதி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரைப் பாத்திரங்களில் பிடித்தபோது அதில் புழுக்கள், குப்பைகளுடன் கலந்துவருவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் புழுக்களுடன் விநியோகிக்கப்பட்ட குடிநீர்
சத்தியமங்கலம் நகர்ப் பகுதியில் புழுக்களுடன் விநியோகிக்கப்பட்ட குடிநீர்

இது குறித்து நகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால் குறித்த நேரத்திற்கு அலுவலர்கள் வராமல் குடிநீரில் புழுக்கள் கலந்துவருவதைப் பார்க்காமல் அலட்சியமாக இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சாலைக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அலுவலர்களிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

மேலும் இப்பகுதியில் தெருக்களில் சரிவர குப்பைகள் அள்ளாமல் கிடப்பதால், தொற்றுநோய் பரவும் இடர் உள்ளதாகவும், அதே பகுதியில் உள்ள பவானி ஆற்றங்கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒன்றிய அரசை குற்றம் சாட்டுகிறது திமுக - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

ஈரோடு: சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. சுமார் 40 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதிக்கு பவானி ஆற்றிலிருந்து குடிநீர் எடுத்துச் சுத்திகரிக்கப்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 24, 25ஆவது வார்டுகளில் உள்ள கோவிந்தராஜபுரம், மூணு வீடு, பரிசல் துறை வீதி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரைப் பாத்திரங்களில் பிடித்தபோது அதில் புழுக்கள், குப்பைகளுடன் கலந்துவருவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் புழுக்களுடன் விநியோகிக்கப்பட்ட குடிநீர்
சத்தியமங்கலம் நகர்ப் பகுதியில் புழுக்களுடன் விநியோகிக்கப்பட்ட குடிநீர்

இது குறித்து நகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால் குறித்த நேரத்திற்கு அலுவலர்கள் வராமல் குடிநீரில் புழுக்கள் கலந்துவருவதைப் பார்க்காமல் அலட்சியமாக இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சாலைக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அலுவலர்களிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

மேலும் இப்பகுதியில் தெருக்களில் சரிவர குப்பைகள் அள்ளாமல் கிடப்பதால், தொற்றுநோய் பரவும் இடர் உள்ளதாகவும், அதே பகுதியில் உள்ள பவானி ஆற்றங்கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஒன்றிய அரசை குற்றம் சாட்டுகிறது திமுக - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.