ஈரோடு: கரூரில் இருந்து தாளவாடிக்கு நேற்று (ஜூலை 17) சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மூட்டைகளை இறக்கிவிட்டு மீண்டும் கரூர் திரும்பி கொண்டிருந்தது. லாரியை சக்திவேல் என்பவர் ஓட்டினார். மற்றொரு ஓட்டுநர் சுரேஷ் உடனிருந்தார்.
கும்டாபுரம் என்ற இடத்தில் சென்ற லாரி, நிலைதடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி முகப்பின் ஒரு பகுதி சேதமடைந்தது. விபத்தில் ஓட்டுநர் சக்கிவேல் காயமடைந்தார்.
அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு கால்முறிவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து தாளவாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசிட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து