ETV Bharat / state

வேகமாக நிரம்பும் பவானிசாகர் அணை!

author img

By

Published : Aug 9, 2019, 3:54 PM IST

ஈரோடு: பவானிசாகர் அணை வேகமாக நிரம்பிவருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

பில்லூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரும், மாயாற்றில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக பவானிசாகர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 82 அடியை எட்டியுள்ளது.

அணையின் நீர்மட்டக் கொள்ளளவு 105 அடியாக உள்ள நிலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 5அடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணை வேகமாக நிரம்புவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பவானிசாகர் பேரூராட்சி மற்றும் பொதுப்பணித் துறையினர் பவானியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அய்யம்பாளையம், சித்தன்குட்டை ஆகிய அணை நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களிலும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பில்லூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரும், மாயாற்றில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியாக பவானிசாகர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 82 அடியை எட்டியுள்ளது.

அணையின் நீர்மட்டக் கொள்ளளவு 105 அடியாக உள்ள நிலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 5அடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணை வேகமாக நிரம்புவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பவானிசாகர் பேரூராட்சி மற்றும் பொதுப்பணித் துறையினர் பவானியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அய்யம்பாளையம், சித்தன்குட்டை ஆகிய அணை நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களிலும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Intro:Body:tn_erd_02_sathy_dam_flood _awarness_vis_tn10009


வேகமாக நிரம்பு பவானிசாகர் அணை
பவானிசாகர் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு அதிகபட்சமாக 1 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பில்லூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரும் மாயாற்றில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளமும் அணைக்கு நீர்வரத்தாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 82 அடியை எட்டியுள்ளது. அதாவது 6 டிஎம்சி அளவு நீர்இருப்பு அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் கொள்ளளவு 105 அடியாக உள்ள நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 82 அடியை எட்டியுள்ளது. தினந்தோறும் சராசரியாக 5 நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணை வேகமாக நிரம்புவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணை நிரம்ப வாய்ப்புள்ளதால் எந்த நேரமும் அணையில் இருந்த உபரி நீர் பவானிஆற்றில் திறந்துவிடப்படும் என்பதால் பவானிசாகர் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, பவானிசாகர் பேரூராட்சி மற்றும் பொதுப்பணித்துறையினர் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதேபோல அய்யம்பாளையம், சித்தன்குட்டை ஆகிய அணை நீர்ப்பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களிலும் தட்டூரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.