ETV Bharat / state

பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு!

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 66.55 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

author img

By

Published : Aug 7, 2019, 12:19 PM IST

bavani dam

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீர்வரத்தாக உள்ள பவானிசாகர் அணை உள்ளது. நீலகிரி, கேரளா மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் பவானி ஆறு, மோயாற்று வழியாக பவானிசாகர் அணையில் கலப்பதால் இரு தினங்களாக அணைக்கு நீர்வரத்து அதிகபட்சமாக10 ஆயிரம் கனஅடியாக வந்து நாளொன்றுக்கு 2 அடி வீதம் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

கடந்த திங்கள்கிழமை 62.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 66.55 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,927 கனஅடியாகவும் அணையிலிருந்து வெளியேற்றம் 205 கனஅடியாகவும், நீர் இருப்பு 9.5 டிஎம்சியாகவும் உள்ளது.

பவானி ஆற்றிலும், மோயாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீர்வரத்தாக உள்ள பவானிசாகர் அணை உள்ளது. நீலகிரி, கேரளா மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் பவானி ஆறு, மோயாற்று வழியாக பவானிசாகர் அணையில் கலப்பதால் இரு தினங்களாக அணைக்கு நீர்வரத்து அதிகபட்சமாக10 ஆயிரம் கனஅடியாக வந்து நாளொன்றுக்கு 2 அடி வீதம் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

கடந்த திங்கள்கிழமை 62.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 66.55 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,927 கனஅடியாகவும் அணையிலிருந்து வெளியேற்றம் 205 கனஅடியாகவும், நீர் இருப்பு 9.5 டிஎம்சியாகவும் உள்ளது.

பவானி ஆற்றிலும், மோயாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Intro:nullBody:tn_erd_03_sathy_bhavnisagar_dam__vis_tn10009

பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு:
அணையின் நீர்மட்டம் தினமும் 2 அடி உயர்ந்து 66.55 அடியை எட்டியது.



பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 66.55 அடியை எட்டியுள்ளது. தினமும் 2 அடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீர்வரத்தாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடி, நீர் இருப்பு 32.8 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிஆறும் மோயாறும் அணைக்கு முக்கிய நீர்வரதாக உள்ளன. நீலகிரி மற்றும் கேரளா மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் பவானிஆறு மற்றும் மோயாற்று ஆற்று வழியாக பவானிசாகர் அணையில் கலப்பதால் இரு தினங்களாக அணைக்கு நீர்வரத்து அதிகபட்சமாக10 ஆயிரம் கனஅடியாக வந்து தினமும் 2 அடி நீர்மட்டம் உயர்ந்தது. 5ம் தேதி திங்கள்கிழமை 62.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி அணைநீர்மட்டம் 66.55 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9927 கனஅடியாகவும் அணையில் இருந்து வெளியேற்றம் 205 கனஅடியாக வும் நீர் இருப்பு 9.5 டிஎம்சியாக உள்ளது.கடந்த சில தினங்களாக பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிஆற்றுக்கு திறந்துவிடும் தண்ணீர் 200 கனஅடியாக நீடிக்கிறது.பவானிஆற்றிலும் மோயாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.