ஈரோடு மாவட்டம் பச்சபாளியை அடுத்த சஞ்சய் நகரைச் சேர்ந்த ரவி என்பவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
மகனும் மகளும் சென்னையில் படித்துவரும் நிலையில், ரவி தன் மனைவியுடன் பச்சப்பாயில் வசித்து வந்தார். கடந்த சில நாள்களாக ரவி சோகத்துடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் இருந்த எலி மருந்தை ரவி குடித்துள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் எந்த காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க... ரயிலில் பெண் தற்கொலை - பயணிகள் அதிர்ச்சி!