ETV Bharat / state

திண்டுக்கல்லில் சாமியாரைக் குத்திக் கொலை செய்த பூசாரி!

author img

By

Published : Nov 7, 2019, 7:20 PM IST

திண்டுக்கல்: பழனியில் முன்விரோதம் காரணமாக சாமியார் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

temple priest murdered in palani

திண்டுக்கல் பழனியில் வில்வக்குடில் என்ற ஆசிரமம் உள்ளது. இந்த வளாகத்திற்குள் சிவன்கோயில், அங்காளம்மன் கோயில், மாசாணியம்மன் கோயில் மற்றும் இந்த கோயில்களை நிர்வகித்து வந்த செல்லத்துரை என்பவரது சமாதியும் உள்ளது. இந்தக் கோயில்களை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மலர்கனிராஜா என்பவர் நிர்வாகம் செய்துவந்தார்.

இவருக்கும் இந்த ஆசிரமத்திலுள்ள கோயிலில் பணிபுரியும் பூசாரி தர்மராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் மலர்கனிராஜா தனது மனைவியுடன் இன்று இடும்பன்மலை வாசல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த தர்மராஜ் இருவரையும் கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து மலர்கனிராஜாவின் வயிற்றுப்பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.

சாமியாரைக்குத்திக் கொலை செய்த பூசாரி

இதில் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் சாய்ந்த மலர்கனிராஜா, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதால் மலர்கனிராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பழனி நகர காவல்துறையினர், தப்பியோடிய தர்மராஜை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 760 மாணவ, மாணவிகளுக்கு சொந்த செலவில் குடை வழங்கல் - ஆச்சர்யப்படுத்திய தலைமை ஆசிரியர்!

திண்டுக்கல் பழனியில் வில்வக்குடில் என்ற ஆசிரமம் உள்ளது. இந்த வளாகத்திற்குள் சிவன்கோயில், அங்காளம்மன் கோயில், மாசாணியம்மன் கோயில் மற்றும் இந்த கோயில்களை நிர்வகித்து வந்த செல்லத்துரை என்பவரது சமாதியும் உள்ளது. இந்தக் கோயில்களை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மலர்கனிராஜா என்பவர் நிர்வாகம் செய்துவந்தார்.

இவருக்கும் இந்த ஆசிரமத்திலுள்ள கோயிலில் பணிபுரியும் பூசாரி தர்மராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் மலர்கனிராஜா தனது மனைவியுடன் இன்று இடும்பன்மலை வாசல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த தர்மராஜ் இருவரையும் கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து மலர்கனிராஜாவின் வயிற்றுப்பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.

சாமியாரைக்குத்திக் கொலை செய்த பூசாரி

இதில் குடல் சரிந்து ரத்தவெள்ளத்தில் சாய்ந்த மலர்கனிராஜா, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதால் மலர்கனிராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பழனி நகர காவல்துறையினர், தப்பியோடிய தர்மராஜை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 760 மாணவ, மாணவிகளுக்கு சொந்த செலவில் குடை வழங்கல் - ஆச்சர்யப்படுத்திய தலைமை ஆசிரியர்!

Intro:திண்டுக்கல்
பழனியில் முன்விரோதம் காரணமாக சாமியார் ஒருவர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Body:திண்டுக்கல். 07.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

பழனியில் முன்விரோதம் காரணமாக சாமியார் ஒருவர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இடும்பன் கோவில் அருகே வில்வக்குடில் என்ற ஆசிரமம் உள்ளது. இந்த வளாகத்திற்குள் சிவன்கோவில், அங்காளம்மன் மற்றும் மாசாணியம்மன் கோவில் ஆகியவை உள்ளது. மேலும் இந்த கோவிலை நிர்வகித்து வந்த செல்லத்துரை என்பவரது சமாதியும் உள்ளது. கோவில்களை ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த மலர்கனிராஜா(57) என்பவர் நிர்வாகம் செய்துவந்தார். மலர்கனி ராஜாவிற்கு விஜயா(40) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். அதே கோவிலில் இன்னொரு பூசாரியாக தர்மராஜ் என்பவரும் இருந்து வந்துள்ளார். தர்மராஜ் மற்றும் மலர்க்கனி ராஜாவிற்கு முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் இன்றுகாலை மனைவி விஜயாவுடன் மலர்கனிராஜா தனது இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது இடும்பன்மலை வாசல் அருகே வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த தர்மராஜ் இருவரையும் கீழே தள்ளிவிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் மலர்கனிராஜா வயிற்றில் சராமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். வயிற்றில் படுகாயமடைந்து குடல்சரிந்து ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாமியார் மலர்கனிராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பழனி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தப்பியோடிய தர்மராஜ் என்பவரை தேடிவருகின்றனர். பூசாரிகளுக்கு இடையே நடந்த மோதலில் சாமியார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Conclusion:திண்டுக்கல் பழனியில் முன்விரோதம் காரணமாக சாமியார் ஒருவர் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.