திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வாண்டரான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று இவர்களது உறவினர் சசிகலா மஞ்சுவின் மூத்த குழந்தையை பள்ளியிலிருந்து அழைப்பதற்காக இளைய குழந்தையான மகிழ்மித்ராவுடன் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் முன் பகுதியில் மகிழ்மித்ரா சென்றுள்ளார். ஓட்டுநர் கவனிக்காமல் வாகனத்தை இயக்கியதால் சிறுமி மீது வாகனம் மோதியது. விபத்தில் சிறுமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்த குஜிலியம்பாறை காவல் துறையினர் சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: குழந்தையை உற்சாகப்படுத்திய போராட்டக்காரர்கள்!