ETV Bharat / state

மருத்துவர்கள் வெளியே வந்தால் நடவடிக்கை -மாவட்ட ஆட்சியர்!

திண்டுக்கல்: கரோனா தொற்று கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் பத்திரிக்கையாளர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர், அரசு அலுவலர்கள் ஆகியோர்கள் தடை உத்தரவு முடியும்வரை வெளியில் செல்லக்கூடாது என மாவட்ட கோட்டாட்சியர் உஷா அறிவுறுத்தியுள்ளார்.

author img

By

Published : Apr 29, 2020, 10:10 AM IST

தடை செய்யப்பட்ட பகுதி
தடை செய்யப்பட்ட பகுதி

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர்கள் வசித்த 35க்கும் மேற்பட்ட இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் இப்பகுதியில் வசித்துவரும் மருத்துவர்கள், செவிலியர், பத்திரிகையாளர்கள், அரசுத் துறை உயர் அலுவலர்கள் தடை உத்தரவு முடியும்வரை வெளியில் செல்லக்கூடாது என மாவட்ட கோட்டாட்சியர் உஷா அறிவுறுத்தியுள்ளார்.

இந்த உத்தரவை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 270ன் படியும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள் 1972, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் கீழ் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதி


இதையும் படிங்க: 144 தடை உத்தரவை மீறும் மக்கள் : ஒரே நாளில் 217 வழக்குகள் பதிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர்கள் வசித்த 35க்கும் மேற்பட்ட இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் இப்பகுதியில் வசித்துவரும் மருத்துவர்கள், செவிலியர், பத்திரிகையாளர்கள், அரசுத் துறை உயர் அலுவலர்கள் தடை உத்தரவு முடியும்வரை வெளியில் செல்லக்கூடாது என மாவட்ட கோட்டாட்சியர் உஷா அறிவுறுத்தியுள்ளார்.

இந்த உத்தரவை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 270ன் படியும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள் 1972, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் கீழ் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதி


இதையும் படிங்க: 144 தடை உத்தரவை மீறும் மக்கள் : ஒரே நாளில் 217 வழக்குகள் பதிவு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.