திண்டுக்கல் : ராமையன்பட்டி அருகே, அதிகாலை கோவையிலிருந்து காரைக்குடி நோக்கி பார்சல் சேவை வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அவ்வாகனத்தின் எஞ்சினில் தீப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர் ஜோசப், உடனடியாக சாலையின் இடது புறம் வாகனத்தை நிறுத்தி, உள்ளே இருந்த மற்றொரு ஓட்டுநர் செல்வத்தையும் எழுப்பிவிட்டு அவசர அவசரமாக வாகனத்திலிருந்து குதித்து கீழே இறங்கி உயிர் தப்பினார்.
இந்தத் தீ விபத்தில் லாரியின் எஞ்சின் கேபின் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இவ்விபத்தில் வேனில் இருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிரைண்டர், மிக்ஸி, ரெடிமேட் ஆடைகள், தையல் இயந்திரங்கள், ஆயில் கேன்கள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின.
இதையும் படிங்க : காரில் விளையாடிய சிறுவர்கள்: மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!