ETV Bharat / state

பழனியில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

author img

By

Published : Jun 6, 2022, 3:24 PM IST

அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஜூன் 06) தொடங்கியது.

பழனி வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்
பழனி வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

திண்டுக்கல்: முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இன்று (ஜூன் 06) வைகாசி விசாகத்திருவிழா தொடங்கியது. பழனி கோயிலின் உபகோயிலான பெரியநாயகிஅம்மன் கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் ஆறாம்நாள் திருவிழாவான வருகிற 11ஆம் தேதியும், திருத்தேரோட்டம் ஜூன் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவிலும் நடைபெறவுள்ளது.

திருவிழா நடைபெறும் 10 நாள்களும் தினமும் இரவு தங்கமயில், வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் முத்துக்குமாரசாமி நான்குரதவீதிகளிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகாசி விசாகத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை பழனிதிருக்கோயில் இணைஆணையர் நடராஜன், துணைஆணையர் லட்சுமி ஆகியோர் செய்துவருகின்றனர்.

பழனி வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

இதையும் படிங்க: ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட கிடாவிருந்து திருவிழா - பலியிடப்பட்ட நூறு ஆடுகள்!

திண்டுக்கல்: முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இன்று (ஜூன் 06) வைகாசி விசாகத்திருவிழா தொடங்கியது. பழனி கோயிலின் உபகோயிலான பெரியநாயகிஅம்மன் கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் ஆறாம்நாள் திருவிழாவான வருகிற 11ஆம் தேதியும், திருத்தேரோட்டம் ஜூன் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவிலும் நடைபெறவுள்ளது.

திருவிழா நடைபெறும் 10 நாள்களும் தினமும் இரவு தங்கமயில், வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் முத்துக்குமாரசாமி நான்குரதவீதிகளிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகாசி விசாகத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை பழனிதிருக்கோயில் இணைஆணையர் நடராஜன், துணைஆணையர் லட்சுமி ஆகியோர் செய்துவருகின்றனர்.

பழனி வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

இதையும் படிங்க: ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட கிடாவிருந்து திருவிழா - பலியிடப்பட்ட நூறு ஆடுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.