பழனி முருகன் கோயிலில் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பணன். இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், கருப்பனுக்கு நேற்று(மே.28) திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பழனி திருக்கோயில் ஊழியர் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் அக்கோயில் ஊழியர்களை அச்சத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: தடுப்பூசிக்கு வரிவிலக்கு அளிக்காமல் நிறைவடைந்த ஜிஎஸ்டி கூட்டம்!