ETV Bharat / state

'நவபாஷாண சிலையை கடத்த சதி திட்டம்' - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு

author img

By

Published : Jul 7, 2019, 11:13 PM IST

திண்டுக்கல்: பழனி கோயிலில் உள்ள பழமையான நவபாஷாண சிலையை கடத்தும் நோக்கத்தில்தான் ஐம்பொன் சிலை செய்யப்பட்டது எனும் அதிர்ச்சித் தகவலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.

டிஎஸ்பி ஜெயராம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக்கோயில் பவர் சித்தர் உருவாக்கி பிரதிஷ்டை செய்துள்ள நவபாஷாண முருகன் சிலையை கடத்தும் நோக்கில் மிகப் பெரிய சதி நடந்தது உறுதியாகி உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பழனியில் இரண்டு நாட்களாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர் முகாமிட்டு ஆவணங்களை ஆய்வு செய்து வந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஜெயராம் கூறுகையில், "ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான போகர் சித்தரால் செய்யப்பட்ட நவபாஷாண சிலையின் உரிமையும் அதிகாரமும் எந்த நபருக்கும் எந்த அரசுக்கும், சொந்தம் இல்லை. இந்தத் தன்மையை கண்டறிய சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது. நவபாஷாண சிலையை மாற்ற முதன்முதலில் அடிகோலியவர் பிரதான குற்றவாளி ஸ்தபதி முத்தையா என்று புலன்விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மிகப்பெரிய ரகசிய திட்டத்தை முகத்தை மறைத்து இந்த சதியை செயல்படுத்துவதற்கு பின்னின்று இயக்கியவர்கள் யார் யார் என்பது விரைவில் கண்டறியப்படும்" என்று தெரிவித்தார். அப்போது, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் அமுதா தமிழ்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டிஎஸ்பி ஜெயராம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக்கோயில் பவர் சித்தர் உருவாக்கி பிரதிஷ்டை செய்துள்ள நவபாஷாண முருகன் சிலையை கடத்தும் நோக்கில் மிகப் பெரிய சதி நடந்தது உறுதியாகி உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பழனியில் இரண்டு நாட்களாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவல்துறையினர் முகாமிட்டு ஆவணங்களை ஆய்வு செய்து வந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஜெயராம் கூறுகையில், "ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான போகர் சித்தரால் செய்யப்பட்ட நவபாஷாண சிலையின் உரிமையும் அதிகாரமும் எந்த நபருக்கும் எந்த அரசுக்கும், சொந்தம் இல்லை. இந்தத் தன்மையை கண்டறிய சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது. நவபாஷாண சிலையை மாற்ற முதன்முதலில் அடிகோலியவர் பிரதான குற்றவாளி ஸ்தபதி முத்தையா என்று புலன்விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மிகப்பெரிய ரகசிய திட்டத்தை முகத்தை மறைத்து இந்த சதியை செயல்படுத்துவதற்கு பின்னின்று இயக்கியவர்கள் யார் யார் என்பது விரைவில் கண்டறியப்படும்" என்று தெரிவித்தார். அப்போது, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் அமுதா தமிழ்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டிஎஸ்பி ஜெயராம்
Intro:திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் சிலை செய்ததில் நடந்த முறைகேடு வழக்கு தொடர்பாக இன்றைய பொன்மாணிக்கவேல் விசாரணை செய்தார்


Body:திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் &பழநி
ம.பூபதி ஜூன்:07


பழனி கோவிலில் பழமையான நவபாஷாண சிலையை கடத்தும் நோக்கத்தில்தான் ஐம்பொன் சிலை செய்யப்பட்டது என்பது உறுதி என்ற அதிர்ச்சித் தகவலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் பவர் சித்தர் உருவாக்கி பிரதிஷ்டை செய்துள்ள நவபாஷாண முருகன் சிலையை நடத்தும் நோக்கில் மிகப் பெரிய சதி சதி நடந்தது உறுதியாகி உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர் பழனியில் இரண்டு நாட்களாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் முகாமிட்டு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து வந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஜெயராம் தெரிவித்ததாவது பழனி கோவிலில் கோடிக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வரும் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான போகர் சித்தரால் செய்யப்பட்ட வழிபட்டு வந்த நவபாஷாண சிலையை மற்றும் உரிமையும் அதிகாரமும் எந்த நபருக்கும் எந்த அரசுக்கும் இல்லை என்றும் தன்மையைக் கண்டறிய முடியாத நவபாசன மூலவர் திருமேனியை சிலரின் சொந்த லாபத்திற்காக மாற்றுவதற்காக மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டியுள்ளது உண்மை என்பது விசாரணையில் தெரியவந்தது நவபாஷாண சிலையை மாற்ற முதன்முதலில் அடிகோலியவர் பிரதான குற்றவாளி ஸ்தபதி முத்தையா என்று புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் இந்த மிகப்பெரிய ரகசிய திட்டத்தை முகத்தை மறைத்து இந்த சதியை செயல்படுத்துவதற்கு பின்னின்று இயக்கிய வர்கள் யார் யார் என்பது விரைவில் கண்டறிய உள்ளதாக தெரிவித்தார் மேலும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார் அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி அதிகாரிகள் அமுதா தமிழ்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Conclusion:திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் போகர் சித்தர் உருவாக்கி பிரதிஷ்டை செய்துள்ள நவபாஷாண முருகன் சிலையை கடத்தும் நோக்கில் மிகப் பெரிய சதி நடந்தது உறுதியாகியுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.