ETV Bharat / state

சொக்கப்பனை தீ - பழனியில் பக்தர்கள் சாமி தரிசனம்! - பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா
பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா
author img

By

Published : Dec 11, 2019, 12:07 AM IST

முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவான நேற்று மாலை நேரத்தில் தண்டாயுதபாணி சாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் மலை மீதுள்ள கம்பத்தில் மகரத் தீபம் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பனை ஓலைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சொக்கப்பனை தீயிட்டு எரிக்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசம் எழுப்பினர்.

இம்மலை மீது கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் பக்தர்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களும் அழிந்து போவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோயிலில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா

இதையும் படிங்க:

'கிறிஸ்துவும் சரி கிருஷ்ணனும் சரி இங்குதான் பிறக்கிறார்கள்'

முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவான நேற்று மாலை நேரத்தில் தண்டாயுதபாணி சாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் மலை மீதுள்ள கம்பத்தில் மகரத் தீபம் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பனை ஓலைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சொக்கப்பனை தீயிட்டு எரிக்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசம் எழுப்பினர்.

இம்மலை மீது கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் பக்தர்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களும் அழிந்து போவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோயிலில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா

இதையும் படிங்க:

'கிறிஸ்துவும் சரி கிருஷ்ணனும் சரி இங்குதான் பிறக்கிறார்கள்'

Intro:பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்


Body:திண்டுக்கல் 10.12.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

பழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மகர தீபம் ஏற்றப்பட்டது அதனை தொடர்ந்து சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது கார்த்திகை தீபத் திருவிழாவில் மாலை நேரத்தில் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் மலைமீதுள்ள கம்பத்தில் மகர தீபம் ஏற்றப்பட்டது அதனை தொடர்ந்து பனை ஓலைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள சொக்கப்பானை தீயிட்டு எரிக்கப்பட்டது கார்த்திகை தீப திருவிழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் பக்தர்கள் அரோகரா கோசம் எழுப்பி சொக்கப்பானை தீயிட்டு கொளுத்தப்பட்ட நிகழ்ச்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது மலைமீது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் பக்தர்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களும் அழிந்து போவதாக பக்தர்கள் நம்புகின்றனர் அதன் காரணமாக ஆண்டுதோறும் சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர் கார்த்திகை தீபத் திருவிழாவில் ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சந்திரபானு ரெட்டி தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்தனர் மலை மீது பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Conclusion:திண்டுக்கல் பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
குறித்த செய்தி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.