ETV Bharat / state

'நேர்கொண்ட பார்வை' பார்த்துவிட்டு வந்தவர்களுக்கு நேர்ந்த சோதனை! - ரவுண்ட்ரோடு

திண்டுக்கல்: ராஜேந்திரா திரையரங்கில் 'நேர்கொண்ட பார்வை' படம் பார்த்துவிட்டு கூட்டமாக வெளியேவந்தவர்கள் மீது அதிவேகமாக சென்ற கார் மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திண்டுக்கல்
author img

By

Published : Aug 9, 2019, 12:55 PM IST

திண்டுக்கல் மாவட்டம், ரவுண்ட்ரோடு பகுதியில் ராஜேந்திரா திரையரங்கு உள்ளது. இதில் இன்று காலை 'நேர்கொண்ட பார்வை' படம் பார்த்துவிட்டு கூட்டமாக வெளியேவந்தவர்கள் மீது அவ்வழியே அதிவேகமாக சென்ற கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாமரைபாடியைச் சேர்ந்த வேல்முருகன், வேடசந்தூரைச் சேர்ந்த பிரதீப் ஆகிய இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது.

படுகாயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

கூட்டத்தில் மோதிய கார்-10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

முன்னதாக நிறுத்தாமல் சென்ற காரை அருகில் இருந்தவர்கள் துரத்திச் சென்றனர். அப்போது காரை ஓட்டிச்சென்றவர் ராஜேந்திரா திரையரங்கிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள லட்சுமி சுந்தரம் காலனிவரை சென்று அங்குள்ள ஒரு வீட்டின் சுவரில் மோதினார். பின்னர் காரிலிருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்தவரை தேடிவருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், ரவுண்ட்ரோடு பகுதியில் ராஜேந்திரா திரையரங்கு உள்ளது. இதில் இன்று காலை 'நேர்கொண்ட பார்வை' படம் பார்த்துவிட்டு கூட்டமாக வெளியேவந்தவர்கள் மீது அவ்வழியே அதிவேகமாக சென்ற கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாமரைபாடியைச் சேர்ந்த வேல்முருகன், வேடசந்தூரைச் சேர்ந்த பிரதீப் ஆகிய இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது.

படுகாயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

கூட்டத்தில் மோதிய கார்-10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

முன்னதாக நிறுத்தாமல் சென்ற காரை அருகில் இருந்தவர்கள் துரத்திச் சென்றனர். அப்போது காரை ஓட்டிச்சென்றவர் ராஜேந்திரா திரையரங்கிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள லட்சுமி சுந்தரம் காலனிவரை சென்று அங்குள்ள ஒரு வீட்டின் சுவரில் மோதினார். பின்னர் காரிலிருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்தவரை தேடிவருகின்றனர்.

Intro:திண்டுக்கல்

சாலையில் தாறுமாறாக ஓடிய காரால் இருவருக்கு கால் முறிவு.
Body:
திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியில் ராஜேந்திரா தியேட்டரில் உள்ளது. இங்கு அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை பார்த்துவிட்டு கூட்டமாக ரசிகர்கள் வெளியே வந்தனர். அப்பொழுது அவ்வழியாக அதிவேகத்தில் சொகுசு கார் ஒன்று கூட்டத்திற்குள் புகுந்தது.

இந்த கார் ராஜேந்திரா தியேட்டரிலிருந்து லட்சுமி சுந்தரம் காலனி வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று காரை வீட்டின் சுவற்றில் இடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த விபத்தில் தாமரைபாடியைச் சேர்ந்த வேல்முருகன், வேடச்சந்தூரை சேர்ந்த பிரதீப் ஆகியோர் கால் முறிவு ஏற்பட்டவுடன் பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறு காயங்களுடனும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் வேல்முருகன் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சாலையின் ஓரத்தில் நிறுத்தியிருந்த பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் தாறுமாறாக ஓடிய காரை கைப்பற்றி விபத்தை ஏற்படுத்திய நபரை தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.