தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் சோமனஅள்ளி கிராமத்தில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி பெ. கொல்லஅள்ளி கிராம நிர்வாகம், நாடக குழுவினர், மகாபாரதத்தில் வரும் துரியோதனர், கிருஷ்ணர், பாஞ்சாலி வேடமணிந்து கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு வசனங்களை பேசியும், வைரஸ் தொற்று எப்படி மனிதா்களுக்கு பரவுகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் முகக் கசவம் அணிந்தே வெளியே செல்லவேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், சமுக இடைவெளியை கடைபிடித்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதையும் படிங்க... ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியர்கள்!