ETV Bharat / state

’காவிரி உபரி நீர் திட்டத்திற்காகப் போராட்டம் நடத்த தயார்’ - அன்புமணி ராமதாஸ்

தருமபுரி: மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த எத்தனை முறை வேண்டுமானாலும் போராட்டம் நடத்த தயார் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Nov 3, 2019, 11:41 PM IST

அன்புமணி

தருமபுரியை அடுத்த பைசுஅள்ளியில் உள்ள திருமண மண்டபத்தில் பாமக கட்சியின் முப்படைகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ”கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

மேடையில் பேசும் அன்புமணி

அப்போது நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்ததை அவருக்கு நினைவூட்டினேன். மேலும் மொரப்பூர் ரயில் திட்டத்தை துரிதமாக செயல்படுத்த ரயில்வே அலுவலர்களை சந்தித்தும் அழுத்தும் கொடுத்துள்ளேன். அதேபோல் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த எத்தனை முறை வேண்டுமானாலும் போராட்டம் நடத்த தயார்” என்றார்.

இதையும் படிங்க: தேர்தலில் பாமக தோல்வி குறித்த கேள்விக்கு நழுவிய ராமதாஸ்!

தருமபுரியை அடுத்த பைசுஅள்ளியில் உள்ள திருமண மண்டபத்தில் பாமக கட்சியின் முப்படைகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், ”கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

மேடையில் பேசும் அன்புமணி

அப்போது நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்ததை அவருக்கு நினைவூட்டினேன். மேலும் மொரப்பூர் ரயில் திட்டத்தை துரிதமாக செயல்படுத்த ரயில்வே அலுவலர்களை சந்தித்தும் அழுத்தும் கொடுத்துள்ளேன். அதேபோல் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த எத்தனை முறை வேண்டுமானாலும் போராட்டம் நடத்த தயார்” என்றார்.

இதையும் படிங்க: தேர்தலில் பாமக தோல்வி குறித்த கேள்விக்கு நழுவிய ராமதாஸ்!

Intro:tn_dpi_01_pmk_anbumani_speech_vis_7204444Body:tn_dpi_01_pmk_anbumani_speech_vis_7204444Conclusion:தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் பகுதியில் இருந்து காவிரி உபரி திட்டத்தை செயல்படுத்த எந்த தியாகத்தையும் செய்வேன் அன்புமணி ராமதாஸ் பேச்சு.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தருமபுரி பைசுஅள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் முப்படைகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.இந்நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சந்தித்து தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி காவிரி உபரிதிட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்ததை நினைவூட்டல் செய்ததாகவும் தெரிவித்தார்.தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்தை துரிதமாக செயல்படுத்த அதிகாரிகளை சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளதாகவும்.காவிரி உபரியை திட்டத்தை செயல்படுத்த போராடவும் தயங்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.