ETV Bharat / state

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினர் 3 மணி நேர தேடுதலுக்கு பின்னர் சடலமாக மீட்டனர்.

author img

By

Published : Apr 9, 2021, 5:09 AM IST

காவிரியில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு
காவிரியில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு

தர்மபுரி: பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சிக்க மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் மனைவி ஜானகி. இவர்களின் மகன் ரஞ்சித்குமார் (21). சிவக்குமார் அவரது குடும்பத்தினர், உறவினர் ஒருவரின் ஈமச்சடங்கு நிகழ்ச்சிக்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் முதலைப்பண்ணை எதிரில் உள்ள பகுதிக்கு சென்று ஈமச்சடங்கு மேற்கொண்டனர்.

அங்கு ரஞ்சித்குமார் உள்ளிட்டவர்கள் காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது குளித்துக் கொண்டிருந்த ரஞ்சித்குமார் திடீரென ஆற்று நீரில் மூழ்கி மாயமானார். உடன் இருந்தவர்கள் அவரை தேடி பார்த்து கிடைக்கவில்லை.

உடனடியாக‌ அங்கிருந்தவர்கள் ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இளைஞர் ரஞ்சித்குமார் மாயமான ஆற்றுப் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேர தேடுதலுக்கு பின்னர் ரஞ்சித்குமார் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஒகேனக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் காவலர்

தர்மபுரி: பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி அடுத்த சிக்க மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் மனைவி ஜானகி. இவர்களின் மகன் ரஞ்சித்குமார் (21). சிவக்குமார் அவரது குடும்பத்தினர், உறவினர் ஒருவரின் ஈமச்சடங்கு நிகழ்ச்சிக்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் முதலைப்பண்ணை எதிரில் உள்ள பகுதிக்கு சென்று ஈமச்சடங்கு மேற்கொண்டனர்.

அங்கு ரஞ்சித்குமார் உள்ளிட்டவர்கள் காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது குளித்துக் கொண்டிருந்த ரஞ்சித்குமார் திடீரென ஆற்று நீரில் மூழ்கி மாயமானார். உடன் இருந்தவர்கள் அவரை தேடி பார்த்து கிடைக்கவில்லை.

உடனடியாக‌ அங்கிருந்தவர்கள் ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இளைஞர் ரஞ்சித்குமார் மாயமான ஆற்றுப் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேர தேடுதலுக்கு பின்னர் ரஞ்சித்குமார் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஒகேனக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் காவலர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.