ETV Bharat / state

தருமபுரி ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு - எம்பி செந்தில்குமார் தகவல்!

MP Senthilkumar: தருமபுரி ரயில் நிலையத்தில் நவீன கழிப்பிட வசதிகள், தானியங்கி நடைமேடை, நவீன அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட வசதிகள் ரூபாய் 15 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 5:51 PM IST

எம் பி செந்தில் குமார் செய்தியாளர் சந்திப்பு
எம் பி செந்தில் குமார் செய்தியாளர் சந்திப்பு
எம் பி செந்தில் குமார் செய்தியாளர் சந்திப்பு

தருமபுரி: மக்கள் பயன்பாட்டிற்காக தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 15 கோடி ரூபாய் ஒதுகப்பட்டுள்ளது என, தருமபுரி ரயில் நிலையத்தை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “தருமபுரி ரயில் நிலையத்தில் 2004ஆம் ஆண்டு நடைமேடை அமைக்கப்பட்டது. அதற்கு பின்பு பெரிய அளவில் நடைமேடை நவீனப்படுத்தப்படவில்லை. தற்போது மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 15 கோடி தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கி உள்ளது. மக்களவை உறுப்பினர் என்ற முறையில், தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில் இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

நாம் முன்வைத்த அத்தனை கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்திற்கு அருகில் 400 மோட்டார் சைக்கிள்கள், 50 கார் நிறுத்தும் அளவிற்கு வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. கான்கிரீட் தரைப்பாலம், மூன்று பயணிகள் காத்திருப்பு இடங்கள், குடிநீர் வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள், தானியங்கி நடைமேடை, நவீன அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் தருமபுரி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது.

இப்பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் காரணமாக தருமபுரி ரயில் நிலையம் புதுப்பொலிவு பெற்று பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்” என்றார் டாக்டர் செந்தில்குமார்.

தென்மேற்கு ரயில்வே துறையின் கீழ் உள்ள தருமபுரி ரயில் நிலையத்தில், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் பல்வேறு ரயில்கள் நின்று செல்கிறது. அண்மையில் பிரதமர் தொடங்கி வைத்த கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயிலும் தருமபுரி ரயில் நிலையத்தில் நின்று செல்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவையில் திருவள்ளுவர் சிலை திறப்பு.. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த மக்கள்!

எம் பி செந்தில் குமார் செய்தியாளர் சந்திப்பு

தருமபுரி: மக்கள் பயன்பாட்டிற்காக தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 15 கோடி ரூபாய் ஒதுகப்பட்டுள்ளது என, தருமபுரி ரயில் நிலையத்தை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “தருமபுரி ரயில் நிலையத்தில் 2004ஆம் ஆண்டு நடைமேடை அமைக்கப்பட்டது. அதற்கு பின்பு பெரிய அளவில் நடைமேடை நவீனப்படுத்தப்படவில்லை. தற்போது மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 15 கோடி தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கி உள்ளது. மக்களவை உறுப்பினர் என்ற முறையில், தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில் இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

நாம் முன்வைத்த அத்தனை கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்திற்கு அருகில் 400 மோட்டார் சைக்கிள்கள், 50 கார் நிறுத்தும் அளவிற்கு வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. கான்கிரீட் தரைப்பாலம், மூன்று பயணிகள் காத்திருப்பு இடங்கள், குடிநீர் வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள், தானியங்கி நடைமேடை, நவீன அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் தருமபுரி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது.

இப்பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் காரணமாக தருமபுரி ரயில் நிலையம் புதுப்பொலிவு பெற்று பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்” என்றார் டாக்டர் செந்தில்குமார்.

தென்மேற்கு ரயில்வே துறையின் கீழ் உள்ள தருமபுரி ரயில் நிலையத்தில், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் பல்வேறு ரயில்கள் நின்று செல்கிறது. அண்மையில் பிரதமர் தொடங்கி வைத்த கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயிலும் தருமபுரி ரயில் நிலையத்தில் நின்று செல்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவையில் திருவள்ளுவர் சிலை திறப்பு.. செல்ஃபி எடுத்து மகிழ்ந்த மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.