ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 3 ஆண்டு சிறை!

author img

By

Published : Nov 5, 2020, 10:04 PM IST

தருமபுரி: கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை கொடுத்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தர்மபுரி
தர்மபுரி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர் 2016ஆம் ஆண்டு 6 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கு இன்று (நவ. 05) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்து நீதிபதி, மணிகண்டன் மீது குற்றம் உறுதியானதையடுத்து, அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர் 2016ஆம் ஆண்டு 6 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கு இன்று (நவ. 05) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்து நீதிபதி, மணிகண்டன் மீது குற்றம் உறுதியானதையடுத்து, அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.