தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் வீரமணி. இவருக்கு பூர்வீக சொத்தை பிரித்து கொள்வதில் சகோதரியுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வீரமணி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த வீரமணி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
திடீரென அவர் அரசு மருத்துவமனை முன்பு, சேலம் தர்மபுரி நெடுஞ்சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
லாரி ஓட்டுநர் நெடுஞ்சாலையில் படுத்து போராட்டம் அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவல் துறையினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து காவல் துறையினர் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திடீரென சாலையில் படுத்து லாரி ஓட்டுநர் வீரமணி போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குளிக்கச்சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு