ETV Bharat / state

அதிக மகசூலில் அறுவடை செய்யப்பட்ட சாம்பல் பூசணி - தர்மபுரியில் தசரா விழாவுக்கு தயாரான சாம்பல் பூசணி

தருமபுரி: தசரா பண்டிகையை முன்னிட்டு பென்னாகரம் பகுதியில் பயிரிடப்பட்ட சாம்பல் பூசணியின் விற்பனை தீவிரமாகியுள்ளது.

தர்மபுரியில் தசரா விழாவுக்கு தயாரான சாம்பல் பூசணி
author img

By

Published : Oct 5, 2019, 9:52 PM IST

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆயுதபூஜையில் வைக்கப்படும் சாம்பல் பூசணி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் இந்த பூசணியை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து பெங்களூர் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

சாம்பல் பூசணி அறுவடை தீவிரம்

கடந்த மூன்று வாரங்களாக தருமபுரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, வழக்கத்தைவிட இந்த ஆண்டு சாம்பல் பூசணி அதிக மகசூலை தந்துள்ளது. ஒரு பூசணிகாயின் எடை 2 கிலோவிலிருந்து தொடங்கி 8 கிலோ வரை பெரிதாக காய்த்து நல்ல மகசூலை தந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். மூன்று மாத பயிரான இந்த சாம்பல் பூசணி சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்க:

அதிக வருமானம் ஈட்டும் முதல் இரவு நேர வனவிலங்குப் பூங்கா!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆயுதபூஜையில் வைக்கப்படும் சாம்பல் பூசணி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் இந்த பூசணியை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து பெங்களூர் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

சாம்பல் பூசணி அறுவடை தீவிரம்

கடந்த மூன்று வாரங்களாக தருமபுரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, வழக்கத்தைவிட இந்த ஆண்டு சாம்பல் பூசணி அதிக மகசூலை தந்துள்ளது. ஒரு பூசணிகாயின் எடை 2 கிலோவிலிருந்து தொடங்கி 8 கிலோ வரை பெரிதாக காய்த்து நல்ல மகசூலை தந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். மூன்று மாத பயிரான இந்த சாம்பல் பூசணி சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்க:

அதிக வருமானம் ஈட்டும் முதல் இரவு நேர வனவிலங்குப் பூங்கா!

Intro:tn_dpi_01_sambal_pusani_sale_vis_7204444Body:tn_dpi_01_sambal_pusani_sale_vis_7204444Conclusion:

தருமபுரி ..........தசரா பண்டிகை விற்பனைக்காக சாம்பல் பூசணி பென்னாகரம் பகுதிகளில் அறுவடை தீவிரம். நாளை மறுநாள் ஆயுதபூஜை  கொண்டாடப்படுவதால் பூஜை பொருட்களில் முக்கிய பொருளான சாம்பல் பூசணி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது.கடந்த மூன்று வாரங்களாக மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக சாம்பல் பூசணி வழக்கத்தை விட அதிக மகசூலை தந்துள்ளது. பூசணி ஒரு காய் எடை 2 கிலோ வில் தொடங்கி 8 கிலோ எடை வரை பெரிதாக காய்த்து நல்ல மகசூலை தந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவிற்கு தேவையான சாம்பல் பூசணி தருமபுரி மாவட்டம்  பென்னாகரம் பகுதியில் இருந்து வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து பெங்களூர் பகுதிகளில்  விற்பனை செய்து வருகின்றனர் விவசாயிகளிடம் இருந்து கிலோ 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிட விவசாயிக்கு 50 ஆயிரம் வரை லாபம் கிடைத்துள்ளது. சாம்பல் பூசணி மூன்று மாத பயிர் என்பது குறிப்பிடத்தக்கது.விலை உயர்வு மற்றும் மகசூல் அதிகரித்ததால் சாம்பல் பூசணி விவசாயம் செய்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.