ETV Bharat / state

திமுக தொண்டனின் மூக்கை உடைத்த அதிமுகவினர்!

author img

By

Published : Apr 4, 2021, 9:52 AM IST

தர்மபுரி: முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தற்கு அதிமுகவினர் திமுக தொண்டரின் மூக்கை உடைத்தனர் எனக் கூறப்படுகிறது.

திமுக Vs அதிமுக  திமுக தொண்டரின் மூக்கடை உடைத்த அதிமுகவினர்  திமுக -அதிமுக தொணடர்களிடையே கைகலப்பு  Melee between DMK- ADMK Members  DMK- ADMK  DMK Vs ADMK  DMK member's nose broken ADMK in pappireddipatti  Pappireddipatti DMK- ADMK fight
DMK member's nose broken ADMK in pappireddipatti

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கோவிந்தசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கேலி கிண்டல் செய்தும் தகாத வார்த்தைகளால் திட்டியும் பரப்புரை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அங்கிருந்த திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். திமுக - அதிமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில், அதிமுகவினர் தாக்தியதில் திமுகவைச் சேர்ந்த சிவக்குமார் (43) என்பவரது மூக்குடைந்தது. இதையடுத்து, உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

திமுக - அதிமுக மோதல்

இது குறித்து அதிமுகவைச் சேர்ந்த சீனு (53), ஜெகதீசன் (44) ஆகியோர் மீது பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆபாசமாகப் பேசி வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கச் சொல்லும் கே.என். நேரு - காணொலி வைரல்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கோவிந்தசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கேலி கிண்டல் செய்தும் தகாத வார்த்தைகளால் திட்டியும் பரப்புரை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அங்கிருந்த திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். திமுக - அதிமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில், அதிமுகவினர் தாக்தியதில் திமுகவைச் சேர்ந்த சிவக்குமார் (43) என்பவரது மூக்குடைந்தது. இதையடுத்து, உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

திமுக - அதிமுக மோதல்

இது குறித்து அதிமுகவைச் சேர்ந்த சீனு (53), ஜெகதீசன் (44) ஆகியோர் மீது பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆபாசமாகப் பேசி வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கச் சொல்லும் கே.என். நேரு - காணொலி வைரல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.