தர்மபுரி மாவட்ட தேமுதிக சார்பில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேமுதிக மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுதீஷ் கூறியதாவது, "தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் இன்று தொடங்கியது. இதனையொட்டி ஜனவரி மாதம் நடைபெறவுள்ள செயற்குழு பொதுக்குழு கூட்டம் கூட்டி தொண்டர்களின் முடிவை விஜயகாந்த் அறிவிப்பார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிச்சயம் தேர்தல் பரப்புரைக்கு வருவார்.
ரஜினிகாந்த் 30 ஆண்டுகளாக கட்சி ஆரம்பிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். நிச்சயம் அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார். கட்சி ஆரம்பித்த பிறகு கருத்துகளை தெரிவிக்கிறேன். தேமுதிக தொடர்ந்து அதிமுக கூட்டணியில் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பேரிகார்டுகளில் தனியார் விளம்பரங்களை அனுமதிப்பது ஏன்? - நீதிமன்றம் கேள்வி