ETV Bharat / state

சாதிமறுப்பு திருமண விவகாரம்: பூச்சிமருத்து கொடுத்து நடத்துனர் கொலை!

தருமபுரி: சாதி மறுப்பு திருமண விவகாரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் பூச்சி மருந்து கொடுத்து அரசு பேருந்து நடத்துனரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

inter caste marriage issue dharmapuri
author img

By

Published : Aug 6, 2019, 3:40 AM IST

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவரும் அதேப்பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்வபரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயில் ஒன்றில் திருமணம் செய்துக்கொண்டு பெங்களூருவில் வசித்துவந்தனர் .

இதையறிந்த பிரியாவின் உறவினர் இருவரையும் அழைத்து வந்து, தாக்கியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் பிரியாவின் உறவினரும், அரசு பேருந்து நடத்துனருமான தர்மலிங்கம் என்பவர் மூன்று தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரை கடத்திச் சென்று ஒகேனக்கல் காட்டில் வைத்து தாக்கியதோடு மட்டுமில்லாமல், வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை திணித்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

சோகத்துடன் அமர்ந்து இருக்கும் நடத்துனரின் உறவினர்கள்

சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் ஓடிவருவதை பார்த்த அந்த நபர்கள் தர்மலிங்கத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். பின்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தர்மலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூன்று தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடத்துனர் தர்மலிங்கம், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினர்கள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஐந்து மருத்துவர்கள் முன்னிலையில், உடற்கூறு ஆய்வு நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவரும் அதேப்பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்வபரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயில் ஒன்றில் திருமணம் செய்துக்கொண்டு பெங்களூருவில் வசித்துவந்தனர் .

இதையறிந்த பிரியாவின் உறவினர் இருவரையும் அழைத்து வந்து, தாக்கியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் பிரியாவின் உறவினரும், அரசு பேருந்து நடத்துனருமான தர்மலிங்கம் என்பவர் மூன்று தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரை கடத்திச் சென்று ஒகேனக்கல் காட்டில் வைத்து தாக்கியதோடு மட்டுமில்லாமல், வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை திணித்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

சோகத்துடன் அமர்ந்து இருக்கும் நடத்துனரின் உறவினர்கள்

சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் ஓடிவருவதை பார்த்த அந்த நபர்கள் தர்மலிங்கத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். பின்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தர்மலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூன்று தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடத்துனர் தர்மலிங்கம், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினர்கள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஐந்து மருத்துவர்கள் முன்னிலையில், உடற்கூறு ஆய்வு நடத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:tn_dpi_01_intercaste_marriage_issue_onedeath_img_7204444Body:tn_dpi_01_intercaste_marriage_issue_onedeath_img_7204444Conclusion:கலப்பு திருமண விவகாரத்தில் மர்ம நபர்கள் தாக்கியதில்அரசு பஸ் நடத்துனர் பரிதாபமாக உயிரிழப்பு. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பிக்கம்பட்டி பகுதியைச் சார்ந்த பிரியா என்ற பெண் மாற்று சமூகத்தைச் சார்ந்த அஜித்குமார் என்பரை காதலித்து வீட்டை விட்டு வெளியேறிதிருமணம் செய்து கொண்டார். இவ்விவகாரம் தொடர்பாக பிரியாவின் குடும்பத்திற்கும் அஜித்குமாரின் குடும்பத்திற்கும் பிரச்சனை எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அஜித்குமார் குடும்பத்தினர் தர்மபுரியில் இருந்து வெளியேறி பெங்களூருவில் தங்கியிருந்தனர் .பிரியாவின் உறவினர் அவர்களை சமாதானம் செய்து அழைத்து வந்து அவர்களை தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் பிரியாவின் உறவினர் தர்மலிங்கம் இவர் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருகிறார் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைப்பயிற்சி மேற்கொண்டபோது சில நபர்கள் இவரை கடத்திக்கொண்டு ஒகேனக்கல் காட்டில் பலமாக தாக்கி உடலில் காயப்படுத்தி வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை திணித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த தர்மலிங்கத்தை பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர் இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட தர்மலிங்கம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மூன்று தினங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.இந்நிலையில் தர்மலிங்கத்தின் உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனர்.தர்மலிங்கத்தை கடத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஐந்து மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவை வைத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர் .இச்சம்பவம் தொடர்பாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பென்னாகரம் சிக்கம்பட்டி பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.